×
 

#BREAKING கீ செயினில் மறைத்திருந்த மர்மம்... ஆரணியில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து...!

ஆரணி டவுன் பகுதியில் பள்ளி அருகே மாணவனை சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் சதீஷ்குமார் (15) என்ற 10ம் வகுப்பு மாணவனுக்கும் வசீகரன்(15) என்கின்ற மாணவனும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் சதீஷ்குமார்  என்பவருக்கு பின்பக்க கழுத்தில் கத்தி  குத்து விழுந்து  படுகாயமடைந்து ஆரணி  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: 10 நாளில் இஸ்ரேலின் கதை முடிந்துவிடும்! வான் பாதுகாப்பு மையத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய ஈரான்..!

பள்ளிக்கு அருகேயுள்ள பேருந்து நிலையத்தில் இரு மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நடந்த கைகலப்பில் மாணவன் வசீகரன் கீ செயினில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமார் கழுத்தின் மீது ஓங்கி குத்தியதாக கூறப்படுகிறது. 

இச்சம்பவம் குறித்து ஆரணி நகர காவல்நிலைய போலீசார் விசாரணை.
 

இதையும் படிங்க: பெண் தொழிலாளர்களால் தலைநிமிரும் தமிழகம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share