பெண் தொழிலாளர்களால் தலைநிமிரும் தமிழகம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தமிழக தொழில்துறையில் தான் அதிக அளவிலான பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
சென்னை, நந்தம்பாக்கத்தில் 16-வது சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் உள்ள 16 லட்சம் பதிவு செய்யப்பட்ட பெண் தொழிலாளர்களில்,
6 லட்சம் பேர், அதாவது 42 விழுக்காடு தமிழ்நாட்டில் உள்ளதாக தெரிவித்தார்.
திராவிட மாடல் ஆட்சியில் தொழில் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021ம் ஆண்டு முதல் ஏற்றுமதிகளை அதிகரித்து வரும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்றும், தொழில் துறையினர், தொழிலாளர் நலனுக்கு என்னவெல்லாம் தேவை என உன்னிப்பாக கவனித்து செயல்படுவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: நீல கலர்ல மாத்தினா அப்பா தண்ணீர்.. தொடரும் ஸ்டிக்கர் சிந்துபாத்.. அதிமுக விமர்சனம்!!
14 தொழிற்பேட்டைகளை உருவாக்கியுள்ளதாகவும், இன்னும் அதிகமான தொழிற்பேட்டைகளை உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: PTR கொடுத்த பகீர் வாக்குமூலம்.. துவண்டு போன தொழில்துறை.. கொந்தளித்த அன்புமணி!!