அரசு பேருந்து ஓட்டுநரை செருப்பால் அடித்த விவகாரம்... வீடியோ வெளியிட்ட பேருந்து நிலைய உதவியாளர்!!
மதுரை ஆரப்பாளையத்தில் ஓட்டுனரை காலணியால் அடித்த உதவி மேலாளர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு செல்லும் அரசு பேருந்தை ஓட்டுநர் கணேசன் எடுக்க இருந்தார். அப்போது பேருந்தில் ஏறிய பயணிகள் பேருந்து புறப்படும் நேரம் குறித்து கேட்டபோது கணேசன், இது பற்றி பேருந்து நிலைய உதவி மேலாளர் தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்துவிடம் பயணிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் இந்த பேருந்து போகாது, வேறு பேருந்தில் செல்லுமாறு மாரிமுத்து கூறியதாக தெரிகிறது. இதனால் பயணிகள் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து ஓட்டுநர் கணேசன், உதவி மேலாளர் அறைக்கு ஆவேசமாக சென்று அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: திமுகவை விரட்டுவதே ஒற்றை இலக்கு..! அண்ணாமலை அனல் தெறிக்கும் பேச்சு..!
அப்போது, திடீரென நீ தான் பயணிகளை எனக்கு எதிராக திருப்பி விடுகிறாயா என்று கேட்டு ஓட்டுநர் கணேசனை, உதவி மேலாளர் செருப்பால் தாக்கினார். இதனை அங்கிருந்த பயணிகள் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.
இதன்பின்னர் அரசு ஓட்டுனரை செருப்பால் தாக்கிய சம்பவத்தில் பேருந்து நிலைய உதவியாளர் மாரிமுத்துவை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் பேருந்து நிலைய உதவியாளர் மாரிமுத்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அரசு பேருந்து ஓட்டுனர் கணேசன் மற்றும் அரசிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலே இலக்கு.. வரும் காலம் நமதே! ஸ்கெட்ச் போட்ட அமித்ஷா..!