புயல் எதிரொலி... ஆக்ரோஷ அலைகள்… காசிமேடு, திருவொற்றியூர் கடல் பகுதியில் சீற்றம்…!
புயல் எதிரொலியாக காசிமேடு உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
மோந்தா புயலானது இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில முன்னதாகவே இந்த மோந்தா தீவிர புயலாக வலுபெற்றிருக்கிறது. ஆந்திர பிரதேசம், ஒடிசாவை ஒட்டி இருக்கக்கூடிய மாநிலங்களில் மழை பெய்யும் பொழுது அதித காற்றுடன் கூடிய மழைப்பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்த தீவிர புயலானது வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை அல்லது இரவுக்குள் காக்கிநாடாவைச் சுற்றி இருக்கக்கூடிய மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திர பிரதேசத்தில் கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக இந்திய வாநிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதற்கு முன்னதாக 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிதமிழகத்தைப்லையல், தற்போது தீவிர புயல் கரையை கடக்கும் போது 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தீவிர புயலாக வலுவடைந்த மோந்தா புயலானது, தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை அல்லது இரவுக்குள்ளாக கரையைக் கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மோன்தா புயல் எதிரொலியால் சென்னையில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. காசிமேடு, திருவெற்றியூர் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் பலத்த காற்று வீசுவதோடு சீற்றத்துடன் கடல் காணப்படுகிறது. அலைகள் மேல் எழுவதால் கடற்கரைப் பகுதிக்கு மக்கள் செல்லாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதையும் படிங்க: பகல் 12 மணிக்கே கடையெல்லாம் மூடுங்க.. புதுவை அரசு அதிரடி உத்தரவு
மேலும், கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பழவேற்காட்டில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. ஆக்ரோஷத்துடன் அலைகள் எழுவதால் கடல் பகுதிக்குள் மக்கள் செல்லாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் மழை தீவிரமடையும்... நெருங்கும் புயல்! வானிலை மையம் எச்சரிக்கை...!