×
 

“இந்த மிரட்டலுக்கு பயந்துக்குற ஆள் நானில்ல... எங்க தலையை துண்டிங்க பார்க்கலாம்....” - அமர் பிரசாத் ரெட்டி ஆவேசம்...!

பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் இப்ராஹிம் ராணிப்பேட்டையில் மேல்விஷாரம் பகுதியில் ஏற்பாடு செய்திருந்த தெருமுனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாஜக மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி உரையாற்றினார். அந்த கூட்டத்தில் திமுகவுக்கு எதிராகவும், பாரத பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் மக்களிடையே உரையாற்றியுள்ளார். இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அமர் பிரசாத் ரெட்டி எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்காத நிலையில், இஸ்லாமியர்களை மிரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றதற்காக அவர் தலையை வெட்டி வீசுவோம் என இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவருக்கு வந்துள்ள இமெயிலில், தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து இந்துத்துவா ஆர்வலர்களால் குறிவைக்கப்படுகிறார்கள். நேற்று முன்தினம், பாஜகவின் வேலூர் இப்ராஹிம், ராணிப்பேட்டையில் உள்ள மேல்விஷாரத்தில் முஸ்லிம்களைத் தாக்க ஒரு பாஜக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, பாஜகவுக்கு வாக்களிக்காததற்காக எங்களை மிரட்டியுள்ளார். முஸ்லிம்கள் என்றென்றும் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்!!!. பாஜக மற்றும் பிரதமர் மோடியை ஆதரித்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி  எங்கள் முக்கிய இலக்காக மாறியுள்ளார். எங்கள் சமூகத்திற்கு எதிராக யாரும் பேச அனுமதிக்க மாட்டோம்.அமர் பிரசாத் ரெட்டியின் தலை பொது இடத்தில் வெட்டி வீசப்படும். எங்கள் முஸ்லிம் சமூகத்தின் வலிமையைக் காட்ட அவரது முழு குடும்பத்தையும் அழிப்போம். எதிர்பாராத நேரத்தில் அவரது வீட்டில் 2 கிலோ ஆர்.டி.எக்ஸை வைத்து தரைமட்டமாக்குவோம். தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பேச அனுமதி அளித்த காவல்துறைக்கு இது ஒரு சவால். முடிந்தால், அமர் பிரசாத் ரெட்டியைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள். தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்கள்!!!!! என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமர் பிரசாத் ரெட்டி, “உங்க தலையை பொது இடத்தில் துண்டிப்போம். 2 கிலோ ஆர்டிஎக்ஸ் தயாராக உள்ளது. அதனை நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத நேரத்தில் உங்கள் வீட்டில் வைப்போம். உங்கள் ஒட்டுமொத்த குடும்பத்தையே அழிப்போம் என அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த இமெயில் எனக்கு மட்டுமல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை போலீஸ் கமிஷ்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சியில் பிஎஃப்ஐ ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் சின்னம் வரையப்பட்டிருந்து. இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததற்கு, அந்த நபர் வழக்கமாக வீடுகள் தோறும் இதுபோல் சின்னத்தை வரையக்கூடியவர்.

இதையும் படிங்க: தமிழகமே ஷாக்...!! “தலையை வெட்டி வீசுவோம்... குடும்பத்தையே அழிச்சிடுவோம்”... பாஜக முக்கிய நிர்வாகிக்கு ISIS கொலை மிரட்டல்....!

அதனால் உங்களுடைய புகாரை ஏற்க முடியாது என கூறிவிட்டார்கள். இதேபோல் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு யாராவது வரைந்திருந்தால் சும்மா விடுவார்களா?. தமிழக பாஜகவில் தலைவராக இருந்தால் உங்களை கொலையே செய்வேன் என்றாலும், குடும்பத்தையே அழிப்பேன் என்றாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா?. இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது. இஸ்லாமியர்கள் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இனி கட்டாயம் செல்வேன். அங்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி செய்த சாதனைகள் குறித்து பேசுவேன். எங்கே தலையை துண்டிப்பார்கள் என பார்க்கிறேன்” எனக்கூறினார். 

இதையும் படிங்க: எழும்பூர் ஆவண காப்பகத்தில் புதிய வசதிகள்...! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share