×
 

எடப்பாடியை வாஷிங் மெஷினில் போட்டு வைத்துள்ளது பாஜக! - திருவொற்றியூரில் டி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்!

வரியைத் திருடும் பாஜக அரசு, 17 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிப் பணக்காரர்களை வாழவைப்பதாகவும், ஊழல்வாதிகள் பாஜக-வில் சேர்ந்தால் புனிதர்களாகி விடுவார்கள் என்றும் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசு மற்றும் அதற்குத் துணைபோகும் அதிமுக-வைக் கண்டித்து, சென்னை திருவொற்றியூர் தபால் நிலையம் அருகே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இன்று பிரம்மாண்டக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் எம்பி-யுமான டி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ கே.பி. சங்கர் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.

இந்தியாவிலேயே உள்நாட்டு உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிற்கு, இந்த பட்ஜெட்டில் ஒரு நயா பைசா கூட ஒதுக்காமல் ஒன்றிய அரசு ஏமாற்றியுள்ளது. திட்டமிட்டுத் தமிழர்களை அவமானப்படுத்தும் செயலில் பாஜக ஈடுபட்டுள்ளது. ஜிஎஸ்டி என்ற பெயரில் மாநிலங்களின் வரி உரிமையைப் பறித்துக் கொண்டு, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதியை அள்ளி வழங்குகிறார்கள். ஏழை மக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் உணவுத் தேவைகளை மாநில அரசுதான் கவனித்து வருகிறது. ஆனால், அதற்குரிய நிதியைத் தராமல் முடக்கும் ஒன்றிய அரசு, இந்த பட்ஜெட்டில் 17 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க அனுமதி பெற்றுள்ளது. இந்தத் தொகை சாதாரண மக்களுக்காக அல்ல, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களை மேலும் வளர்க்கவே பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க:  "விஜய் கட்சிக்குத் தாவத் துடிக்கும் அதிமுக மாஜிக்கள்!" ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேச்சு!

தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி துணை போகிறார். அவரை பாஜக தனது 'வாஷிங் மெஷினில்' போட்டு வைத்துள்ளது. எடப்பாடியின் உறவினர்கள் அமலாக்கத்துறையிடம் சிக்கியுள்ளதால், பயந்துகொண்டு பாஜக-வை எதிர்க்காமல் இருக்கிறார். எவ்வளவு பெரிய திருடனும் பாஜக-வுடன் சேர்ந்தால் 'நல்லவன்' ஆகிவிடலாம் என்பதற்கு அதிமுக-வே சாட்சி. புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள், இந்தியைத் திணிப்போம், இல்லையென்றால் கல்விக்கான நிதியைத் தரமாட்டோம் என்று மாநில அரசை ஒன்றிய அரசு மிரட்டுகிறது. ரயில்வே திட்டங்கள் முதல் சாலைத் திட்டங்கள் வரை தமிழகத்திற்கு எதுவுமே கிடையாது என்ற நிலையை உருவாக்கியுள்ளனர் எனத் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: "பாஜக ஆளாத மாநிலங்களுக்கு சுண்ணாம்பு தடவுகிறார்கள்!" பெ. சண்முகம் கடும் சாடல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share