நடிகையுடன் ரகசிய தொடர்பு! கொதித்தெழுந்த மனைவி! பளார் வாங்கிய பிரான்ஸ் அதிபர்!
ஈரானிய நடிகை ஒருவருடனான ரகசிய தொடர்பால், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு அவரது மனைவி கன்னத்தில் பளார் என்று அறை வைத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் மேக்ரானிடம் கன்னத்தில் அறை வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய நடிகை ஒருவருடன் மேக்ரான் ரகசிய தொடர்பில் இருந்ததே இந்த சம்பவத்திற்குக் காரணம் என புதிய புத்தகம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேக்ரான் (49) தனது மனைவி பிரிஜிட்டை விட 24 வயது இளையவர். பிரிஜிட் மேக்ரானின் பள்ளி ஆசிரியையாக இருந்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து பின்னர் திருமணத்தில் முடிந்தது. உலகம் முழுவதும் வியப்புக்கு உள்ளான இந்த தம்பதியர் வாழ்க்கையில் தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் வியட்நாம் தலைநகர் ஹானோய் விமான நிலையத்தில் மேக்ரான் விமானத்தில் இருந்து இறங்கியபோது, அவரது மனைவி பிரிஜிட் அவரை ஆத்திரத்துடன் தள்ளிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அப்போது அது வெறும் தமாஷ் என்று மேக்ரான் தரப்பு சமாளித்தது. ஆனால், பிரான்ஸ் பத்திரிகையாளர் புளோரியன் டார்டிப் எழுதிய ‘An Almost Perfect Couple’ என்ற புத்தகம் உண்மையை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் போரால் எல்லாமே போச்சு! எகானமி சுத்தமா காலி! புலம்பித்தள்ளும் ஷெபாஸ் ஷெரீப்!!
ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல நடிகை கோல்ஷிப்தே பராஹானி (42) உடன் மேக்ரான் ரகசிய தொடர்பில் இருந்ததாக புத்தகம் கூறுகிறது. மேக்ரான் தனது மொபைல் போனில் அந்த நடிகைக்கு செய்திகள் அனுப்பியதை பிரிஜிட் எதேச்சையாகப் பார்த்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பிரிஜிட் மேக்ரானை அறைந்ததாகவும் புத்தகம் விவரிக்கிறது. விமான நிலையத்தில் நடந்த தள்ளுமுள்ளும் இதன் விளைவே என்று கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளை பிரிஜிட் மேக்ரான் தரப்பு முழுமையாக மறுத்துள்ளது. “நான் ஒருபோதும் என் கணவரின் மொபைலை ஆராய்ந்ததில்லை” என்று பிரிஜிட் தெரிவித்துள்ளார். இருப்பினும், புத்தக ஆசிரியர் உடல் சாராத நெருக்கம் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக பிடிவாதமாகக் கூறி வருகிறார். இந்த விவகாரம் பிரான்ஸ் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற தம்பதியரின் தனிப்பட்ட வாழ்க்கை இப்படி பொதுவெளியில் விவாதிக்கப்படுவது அவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மேக்ரான் தம்பதியரின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்ந்து கவனிக்கப்படும் விவகாரமாக உள்ளது.
இதையும் படிங்க: ட்ரோன் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட இந்திய கப்பல்! மத்திய அமைச்சகம் கடும் கண்டனம்!