#BREAKING மன்னிப்பு கேட்ட சென்னை ஆணையர் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு...!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகிய சென்னை மாநகராட்சி ஆணையர், மன்னிப்பு கோரியதால் அவருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திருப்பப் பெற்றது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகிய சென்னை மாநகராட்சி ஆணையர், மன்னிப்பு கோரியதால் அவருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திருப்பப் பெற்றது.
சென்னை மாநகராட்சியின் 5-வது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி முன்னாள் கவுன்சிலர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 5-வது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதேபோல் பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: லாக் அப் மரணங்கள் ... உறவுகளை பறிக்கொடுத்தவர்களுக்கு விஜய் நேரில் ஆறுதல்
2021-ம் ஆண்டு டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.உத்தரவை அமல்படுத்தாதற்காக சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், ஆணையரின் ஊதியத்தில் இருந்து அதனை பிடித்தம் செய்து, அதை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவுப்படி ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆஜராகினார். நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை எனவும், நடந்த தவறுக்கு முழு பொறுப்பு ஏற்பதாக ஆணையர் கூறியதாகவும், அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விண்வெளியில் கேரட் அல்வா.. இது இஸ்ரோ ட்ரீட்.. வெளுத்துக் கட்டிய சுபான்ஷு சுக்லா..