×
 

மழை பெய்யும் முன்பே அலர்ட்! சென்னையில் 15 அதிகாரிகளுக்கு ஸ்பெஷல் டியூட்டி..! சென்னை மாநகராட்சி நடவடிக்கை..!!

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. நகரில் மழைநீர் தேங்காமல் இருக்கவும் வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்கவும் மழைநீர் வடிகால் பணிகளை விரைவுபடுத்துவது அவசியம் என்பதால் மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி சென்னை முழுவதும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் தொடர்பான அனைத்துப் பணிகளையும் ஆய்வு செய்ய பதினைந்து நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அலுவலக நேரத்திற்கு முன்பாகவே காலையில் களத்தில் இறங்கி பணிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெளிவான ஆணை வழங்கப்பட்டுள்ளது.சென்னை போன்ற பெருநகரத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் திடீர் கனமழை பெய்தால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டுகளின் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு இந்த முறை முன்கூட்டியே தயாராக இருப்பது அவசியம் என்று ஆணையர் கருதியுள்ளார்.

மழைநீர் வடிகால்கள் முறையாக செயல்படாவிட்டால் சாலைகளில் நீர் தேங்குவது, போக்குவரத்து தடைப்படுவது, வீடுகளுக்குள் நீர் புகுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதனைத் தவிர்க்க வடிகால் அமைப்புகள் தூர்வாரப்பட்டு சுத்தமாக வைக்கப்பட வேண்டும். புதிய வடிகால்கள் கட்டும் பணிகள் நிறைவு பெற வேண்டும். இணைப்புகள் இல்லாத இடங்களில் மிஸ்ஸிங் லிங்க் பணிகள் முடிக்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து கண்காணிக்கவே இந்த நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை மக்களுக்கு காலையிலேயே குட்நியூஸ்... சொத்து வரி வசூலிப்பு நிறுத்திவைப்பு... மக்கள் எதிர்ப்புக்கு பணிந்த தவெக...!

பதினைந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு நோடல் அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். இவர்கள் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள், தூர்வாரும் பணிகள், வண்டல் சேகரிப்புத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகள், கால்வாய்கள் மற்றும் பெரிய வடிகால்களின் நிலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவார்கள். 

 

 

இதையும் படிங்க: சொத்து வரி உயர்வா?... 3.49 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்... சென்னை மாநகராட்சி அதி முக்கிய அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share