சென்னையின் முக்கிய ஸ்பாட்டில் “வாட்டர் மெட்ரோ”... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு - எங்கு தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அந்த வாட்டர் மெட்ரோவிற்கான ஆய்வறிக்கைகளைத் தயாரிப்பதற்கான டெண்டரை அறிவித்திருக்கிறது.
சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதற்கான டிஎஃப்ஆர் மற்றும் டிபிஆர் தயாரிப்பதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரியிருக்கிறது.
பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ திட்டம் என்பது கடந்த ஆட்சிக் காலத்திலேயே 25 ஆண்டு கால போக்குவரத்துத் திட்டத்தின் ஒரு அங்கமாக இருந்தது.
இந்த நிலையில், ஆவடி முதல் மகாபலிபுரம் வரையிலான பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்துவதற்கான, அதாவது நீர்வழிப் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான டெண்டர் தற்போது கோரப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: காவிரி தண்ணீரை தர முடியாதா?... கர்நாடகாவிற்கு செக் வைக்கும் தமிழ்நாடு அரசு... காத்திருக்கும் ஆப்பு...!
இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரையில், கடந்த ஆட்சிக் காலத்தில் சென்னை அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாக மாறிவரும் சூழ்நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்துத் துறையில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.
அதில் ஒரு திட்டமாக, சென்னையில் இந்த வாட்டர் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை நேப்பியர் பாலத்திலிருந்து மகாபலிபுரம் வரை, சோழிங்கநல்லூர் வழியாக இந்த வாட்டர் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அந்த வாட்டர் மெட்ரோவிற்கான ஆய்வறிக்கைகளைத் தயாரிப்பதற்கான டெண்டரை அறிவித்திருக்கிறது.
அதன்படி, அந்த டெண்டர் அறிவிப்பில், ஆவடி முதல் மகாபலிபுரம் வரையிலான வாட்டர் மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையைத் தயாரிப்பதற்கும், விரிவான திட்ட அறிக்கையான டிபிஆரைத் தயாரிப்பதற்கும் டெண்டர் கோரப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING கோவையில் அடுத்தடுத்து அதிர்ச்சி... பெண் அடித்துக்கொலை... நடந்தது என்ன?