×
 

சென்னை எழும்பூரில் மீண்டும் மின்சார ரயில் சேவை..! திட்டமிட்ட காலத்திற்கு முன்பே பணிகள் நிறைவு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நாளை  03.04.2026 முதல் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடக்கம்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த நடைமேடை புனரமைப்புப் பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடிக்கப்பட்டதை அடுத்து, நாளை (ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் புறநகர் மின்சார ரயில் சேவைகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் மேம்பாட்டுப் பணிகளுக்காகப் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை ரயில் போக்குவரத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணிகள் மிக விரைவாக முடிக்கப்பட்டதால், ஏப்ரல் 5-க்குப் பதிலாக ஏப்ரல் 3, 2026 நள்ளிரவு 00:00 மணி முதலே ரயில் சேவைகள் தொடங்குகின்றன.

பிப்ரவரி 27 முதல் அமலில் இருந்த தற்காலிக மின்சார ரயில் கால அட்டவணை தற்போது ரத்து செய்யப்படுகிறது.
பிப்ரவரி 20-க்கு முன்பு நடைமுறையில் இருந்த வழக்கமான வார நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை மீண்டும் அமலுக்கு வருகிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி சென்னை வருகை: மீனம்பாக்கம், கிண்டி 'சிவப்பு மண்டலமாக' அறிவிப்பு!

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு – அரக்கோணம் ஆகிய வழித்தடங்களில் இயங்கும் அனைத்து மின்சார ரயில் (EMU/MEMU) சேவைகளும் பழைய நேரப்படி, வழக்கமான நிறுத்தங்களில் நின்று செல்லும். இது தினசரி ஆயிரக்கணக்கான அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்தப் பணிகளின் போது பயணிகள் காட்டிய பொறுமைக்கும், ஒத்துழைப்பிற்கும் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. பயணிகள் நாளை முதல் வழக்கமான கால அட்டவணையைப் பின்பற்றித் தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: தென்னிந்தியாவிலேயே முதன்முறை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ₹25 லட்சம் மதிப்பிலான அபூர்வ அறுவை சிகிச்சை சாதனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share