×
 

தென்னிந்தியாவிலேயே முதன்முறை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ₹25 லட்சம் மதிப்பிலான அபூர்வ அறுவை சிகிச்சை சாதனை!

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஒரு அரிய மருத்துவச் சாதனையைப் படைத்துள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, மருத்துவத் துறையில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக, சிறுநீர் கட்டுப்பாடு செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அதிநவீன மற்றும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சையை இலவசமாகச் செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், பிறந்தது முதல் சிறுநீர் கட்டுப்பாடு செயலிழப்பு (Urinary Incontinence) பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதனால், சுய கட்டுப்பாட்டுடன் சிறுநீர் கழிக்க முடியாமல் அந்தச் சிறுமி பெரும் சிரமத்திற்குள்ளானார். தனியார் மருத்துவமனைகளில் சுமார் 25 லட்சம் ரூபாய் வரை செலவாகக்கூடிய இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சையை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர்.

இத்தகைய நவீன தொழில்நுட்பத்துடனான அறுவை சிகிச்சை தென்னிந்தியாவிலேயே ஒரு அரசு மருத்துவமனையில் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை எளிய மக்களுக்கும் உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்தச் சிகிச்சை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அயனாவரம் தவெக கூட்டத்தில் மது பாட்டில் வீச்சு! மேடையிலேயே அமர்ந்து ஆதவ் அர்ஜுனா போராட்டம்!

தற்போது அந்தச் சிறுமி பூரண குணமடைந்து வருவதாகவும், நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதாகவும் மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்தச் சாதனை தமிழக அரசு மருத்துவமனைகளின் தரத்தை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: பொன்முடிக்கு மீண்டும் சம்மன்! மே 12-ல் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share