முக்கிய வழக்கில் தீர்ப்பு... எடப்பாடிக்கு காத்திருக்கும் ஆப்பு - எச்சரித்த மு.க.ஸ்டாலின்!
கொடநாடு கொலைக் கொள்ளை வழக்கிலும் இதேபோல தீர்ப்பு விரைவில் வரும் என்றார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் மலை மேலிட பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டது குறித்து கேட்டபோது உதகையில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதுமே இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தி வருவதாகவும் அதிமுக ஆட்சியில் யார் விளையாட்டுத்துறை அமைச்சர் என்று உங்களுக்கு தெரியும் தற்போது யார் விளையாட்டுத்துறை அமைச்சர் என்பது உங்களுக்கு தெளிவாக தெரியும் என்றார்.
தற்பொழுது விளையாட்டு துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் வெளிநாட்டு வீரர்கள் கூட தமிழகத்தில் வந்து பயிற்சி பெற்ற செல்வதாகவும் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சிகள் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் இதுபோன்ற நடைபயிற்சி மேற்கொண்டு மக்களையும் சந்தித்து வருவதாக தெரிவித்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பொள்ளாச்சி வழக்கில் யார் குற்றவாளியாக இருந்தாலும், அவர்கள் எப்பேர்பட்டவர்களானாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரச்சாரம் செய்தேன். அதுபோலவே தற்பொழுது தீர்ப்பு வந்துள்ளது. சட்டமன்ற கூட்டத்தில் கூட அதிமுக ஆட்சிக்கு பொள்ளாச்சி சாட்சி என்று பேசிய பேசியல் அது தற்பொழுது நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: வாயை திறந்தாலே பொய்.. இவருக்கு இதே வேலை தான்! முக்கிய புள்ளியை சாடிய முதல்வர்..!
கொடநாடு கொலைக் கொள்ளை வழக்கிலும் இதேபோல தீர்ப்பு விரைவில் வரும் என்றார். எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்தார் அது ஏன் என்று உங்களுக்கே தெரியும். 100 நாள் வேலைத்திட்டத்திற்கும் மெட்ரோ ரயில் திட்டத்திலும் தான் கொண்டு வந்தேன் என்று எடப்பாடி பனிசாமி அம்புட்டும் அடித்து பொய் பித்தலாட்டம் செய்து வருகிறார்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி திமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராணுவ வீரர்களை தரக்குறைவாக பேசியதற்கு குறித்து கேட்டபோது செல்லூர் ராஜூ ஒரு கோமாளி என்றும் அது பற்றி பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார். ஆப்ரேசன் சிந்தூர் சிறப்பாக இருந்தது அதற்காகத்தான் நான் ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தினேன் என்றார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கில் புனிதர் வேடம் தரிப்பதா.? இபிஎஸ்ஸை விளாசி தள்ளிய ஆர்.எஸ். பாரதி!!