×
 

மனிதநேயம் தழைக்கட்டும்..! இஸ்லாமிய சொந்தங்களுக்கு முதல்வர் விஜய் பக்ரீத் வாழ்த்து..!

முதல்வர் விஜய் இஸ்லாமிய சொந்தங்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இஸ்லாமிய மக்களின் முக்கியப் பண்டிகையான பக்ரீத் திருநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது அவரது அரசியல் பயணத்தில் மதநல்லிணக்கத்தையும், அனைத்து சமூக மக்களுடனான ஒற்றுமையையும் வலியுறுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பக்ரீத் பண்டிகை தியாகம், பகிர்வு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் சின்னமாகக் கருதப்படுவது.

இந்த நாளில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் தங்கள் அன்பையும், பொருளாதார உதவியையும் பகிர்ந்துகொள்வார்கள். முதல்வர் விஜய் இந்தப் பண்டிகையின் ஆன்மீக முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, இஸ்லாமிய மக்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் தனது செய்தியில் அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை ஆகிய கருத்துகளை வலியுறுத்தினார். 

இறைவனின் கட்டளைக்கிணங்க தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபி அவர்களின் உன்னதமான இறைபக்தியையும், தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இறைநம்பிக்கை, தியாகம், கருணை, பகிர்வு, மனிதநேயம் ஆகிய உயரிய விழுமியங்களை மனிதகுலத்திற்கு உணர்த்தும் புனிதப் பெருநாளாக பக்ரீத் திகழ்கிறது.

இதையும் படிங்க: "Mega political" சந்திப்பு..! தனி விமான மூலம் டெல்லிக்கு பறந்த முதல்வர் விஜய்..!

ஏழை, எளிய மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும், சமூகத்தில் அன்பும், சமத்துவமும் நிலைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் பக்ரீத் திருநாளில் சமுதாயத்தில் மனிதநேயமும், மதநல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் பக்ரீத் மீண்டும் திருநாள் வாழ்த்துகளை கூறுவதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதல்வர் விஜய் டெல்லி visit..! பிரதமரை சந்திக்க திட்டம்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share