×
 

சென்னையின் முக்கிய தொகுதிக்கு குறி... அறிவாலய அஸ்திவாரத்தை அசைக்க பார்க்கும் கூட்டணி கட்சி... திமுகவுக்கு அடுத்த ஷாக்...!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராகி வருவதாக ஒரு தகவல் கிடைக்க பெற்றிருக்கிறது. 20 தொகுதிகளின் பட்டியலுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தயாராக இருப்பதாக தற்போது தகவல் கிடைக்க பெற்றிருக்கிறது.

 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிகள் தங்களது கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பல பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்டவை தங்களது கூட்டணி கட்சிகளுடன் தங்களது பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக திமுகவை பொறுத்தவரை 22 ஆம் தேதி முதல் பேச்சுவார்த்தை தொடங்கும் என ஏற்கனவே அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொகுதி பங்கீடை பொறுத்த வரை பல கட்ட பேச்சுவார்த்தைகள் இருப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கக்கூடிய நிலையில் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர்களது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக விருப்பமான தொகுதிகளில் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

இந்த 2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் தரப்பிலிருந்து ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று தொடர்ந்து அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்து வரக்கூடிய நிலையில், தங்களது தரப்பில் பலமாக இருக்கக்கூடிய 20 தொகுதிகளை தேர்வு செய்து பட்டியல் தயாரித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

 குறிப்பாக இரட்டை இலக்க தொகுதிகள் என்ற ஒரு வார்த்தையை தொடர்ந்து தெரிவித்து வரக்கூடிய நிலையில் ஒரு 20 தொகுதிகள் வரை தங்கள் கட்சி சார்பில் பலமாக இருக்கக்கூடிய தொகுதிகளாக அவர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். அந்த தொகுதிகளை பொறுத்தவரை ஏற்கனவே மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றிருக்கக்கூடிய தொகுதிகள் மற்றும் ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக சென்னையில் அவர்கள் ஒரு தொகுதியையாவது கேட்டு பெற வேண்டும் என்று உறுதியுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக பெரம்பூர் அல்லது மதுரவாயில் இந்த தொகுதிகளில் ஏதாவது ஒன்றை கேட்டு பெற்றே ஆக வேண்டும் என தீர்மானமாக உள்ளதாக கூறப்படுகிறது.  

இதையும் படிங்க: தமிழகத்தை சீரழிக்கும் போதை மாஃபியாக்கள்… செயலிழந்த திமுக…! பாஜக மாணவரணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மற்றும் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளில் ஏற்கனவே வெற்றி பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக 2001 முதல் 2011 வரை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதேபோல் மதுரவயல் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்றிருக்கிறது. தற்பொழுது இந்த இரு தொகுதிகளிலுமே திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மதுரையை பொறுத்தவரை திருப்பரங்குன்றம் தொகுதியை கேட்டு பெறுவதற்கான எண்ணம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

 அதேபோல அவர்களது பட்டியலை பொறுத்தவரை விளவங்கோடு, கில்லியூர், கோவில்பட்டி பெண்ணாவரம் உள்ளிட்ட தொகுதிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூடுதல் தொகுதிகளை கேட்கவுள்ளது. இதற்காக 10 தொகுதிகள் வரை தங்களது விருப்பப்பட்டியலாக தேர்வு செய்து வைத்திருக்கிறார்களாம். தொடர்ந்து இந்த திமுக கூட்டணியை பொறுத்தவரை தொகுதி பேச்சுவார்த்தை பங்கிட்டு பேச்சுவார்த்தை தொடங்கும் பொழுது கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது விருப்பப்பட்டியல் இருக்கக்கூடிய தொகுதிகளை வைத்து கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: வெற்றுப் பெருமை பத்திரம்..! ஏமாற்றம் என்ன புதுசா.. பழகிப்போச்சு..! விளாசிய நயினார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share