×
 

கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

கன்னியாகுமரியில் புதிய ரயில்வே கோட்டம் அமைக்கவும், ரயில்களை நீட்டிக்கவும் கோரி மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் விஜய் வசந்த் எம்பி மனு அளித்துள்ளார்.

கன்னியாகுமரியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்றும், மதுரை-புனலூர் விரைவு ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும்" என்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. வ. விஜய் வசந்த் மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து விரிவான கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பு, தென் மாவட்ட மக்களின் ரயில்வே வழித்தட மேலாண்மை மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் புள்ளிவிவர விபரங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தற்போதைய சூழலில், புதுடெல்லியில் இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.


மதுரை-புனலூர் (16729/16730) விரைவு ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். சென்னை-திருவனந்தபுரம் வழித்தடத்தில், நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி வழியாக வந்தே பாரத் படுக்கை வசதி  ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும். திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் மற்றும் மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயில்களை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். மங்களூரு-திருவனந்தபுரம் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்கவும், திருவனந்தபுரம்-தாம்பரம் அம்ரித் பாரத் ரயிலைத் தினசரி சேவையாக மாற்றவும் கோரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

தாம்பரம்-கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல்-கன்னியாகுமரி ரயில்களை இயக்கவும், நாகர்கோவில்-கோயம்புத்தூர் தினசரி ஜன சதாப்தி மற்றும் கன்னியாகுமரி-மேட்டுப்பாளையம் தினசரி இரவு ரயிலை அறிமுகப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது. ஹைதராபாத் / செகந்தராபாத் நேரடி சேவைக்காகச் சார்மினார் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்கவும், நேத்ராவதி எக்ஸ்பிரஸை நாகர்கோவில் வரை நீட்டிக்கவும் கோரப்பட்டுள்ளது. மேலும் அனந்தபுரி எக்ஸ்பிரஸுக்கு நாகர்கோவில் டவுன் மற்றும் குழித்துறையிலும், திருவனந்தபுரம்-திருச்சி ரயிலுக்கு இரணியலிலும், அம்ரித் பாரத், விவேக் மற்றும் ஜாம்நகர் ரயில்களுக்குக் குழித்துறையிலும் கூடுதல் நிறுத்தங்கள் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

விழிஞ்சம் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களின் சரக்கு போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு கன்னியாகுமரியில் மின்சார ரயில் என்ஜின் பணிமனை அமைக்க வேண்டும். திருவனந்தபுரம் மற்றும் மதுரை கோட்டங்களின் சில பகுதிகளை மறுசீரமைத்து, கன்னியாகுமரியைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய ரயில்வே கோட்டத்தை உருவாக்க வேண்டும்.

நாகர்கோவில் டவுன், நாகர்கோவில் ஜங்ஷன் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களுக்கு இரண்டாவது நுழைவாயில் அமைக்க வேண்டும். மார்த்தாண்டம் பேருந்து நிலையம் - குழித்துறை ரயில் நிலையம் இடையே உயர் நடைமேடை அமைக்க வேண்டும். கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே தனித்த 3-வது பராமரிப்புப் பாதை அமைக்கவும், இரணியல், கண்டன்விளை, ஒழுகினசேரி, கொட்டாரம்-அகஸ்தீஸ்வரம் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க சிறப்பு நில எடுப்பு அதிகாரியை நியமிக்கவும் கோரப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நாகர்கோவில் சந்திப்பு, நாகர்கோவில் டவுன், இரணியல் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களை அனைத்து நவீன வசதிகளுடன் உலகத் தரத்திலான நிலையங்களாக நவீனமயமாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share