×
 

குப்பையில் ஜெ. புகைப்படங்கள்... எங்க இதய தெய்வம் அவங்க! கொந்தளித்த அதிமுக!

அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அவமதிப்பு செய்யப்பட்டதற்கு அதிமுக தரப்பில் கண்டனம் கூறப்பட்டுள்ளது.

வேடசந்தூரில் நடைபெற்ற மின் பகிர்மான கோட்ட அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் உளவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். அமைச்சர் வருவதால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படங்களை அதிகாரிகள் அகற்றியதாக தெரிகிறது. ஜெயலலிதாவின் புகைப்படங்களை அகற்றிய அதிகாரிகள், குப்பையில் வீசியதாக கூறப்படுகிறது.

எங்காவது ஓரமாக வைத்திருக்கலாமே என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அவமதித்துள்ள சம்பவத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: நீல கலர்ல மாத்தினா அப்பா தண்ணீர்.. தொடரும் ஸ்டிக்கர் சிந்துபாத்.. அதிமுக விமர்சனம்!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அவமதிப்பு செய்துள்ளதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்தும் மக்கள் உள்ளங்களில் வாழும் இதயதெய்வம் அம்மா அவர்களை அவமானப் படுத்திய ஸ்டாலின் அரசுக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா புகைப்படங்களை குப்பைத் தொட்டியில் வீசினால், அவரின் சாதனைகளை மறைத்துவிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 2006இல் இருந்து 2011 வரை திமுக ஆட்சியில் இருண்டிருந்த தமிழ்நாட்டை, ஒளிரூட்டியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.,மின்வெட்டு தமிழ்நாட்டை, மின்மிகை மாநிலமாக்கியவர். இவ்வாறு அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்தது முதல் மின் கட்டண உயர்வை மட்டும் சரியாக செய்யும் ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அவமானச் செயலுக்கு, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தக்க பதிலை 2026-ல் தரும் எனவும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: நாட்டுப்புறப் பாடலால் அனைவரது பேரன்பை பெற்றவர்... கொல்லங்குடி கருப்பாயி மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share