×
 

விஜய் கொடுத்தது பிச்சை காசு திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அதிரடி பேட்டி!

அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் பொருளாளருமான திரு. திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அதிரடியாகவும் நகைச்சுவையாகவும் தனது கருத்துகளை பதிவு செய்தார்.

பாஜக மற்றும் நயினார் நாகேந்திரன் குறித்து செங்கோட்டையன் பேசிய கருத்துக்கு திண்டுக்கல் சீனிவாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நயினார் நாகேந்திரனை மட்டம் தட்டி பேசியதற்காக செங்கோட்டையன் மன்னிப்பு கேட்க வேண்டும். வயதைத் தவிர மற்ற எல்லா விதத்திலும் நயினார் நாகேந்திரன் செங்கோட்டையனுக்குக் குறைந்தவர் அல்ல. அவர் அமைச்சராகவும், தற்போது பாஜகவில் முக்கியத் தலைவராகவும் இருந்து வருகிறார். பாஜகவை ஒரு கட்சியா எனக் கேட்கும் செங்கோட்டையன், ஏன் நிர்மலா சீதாராமன் மற்றும் அமித்ஷாவைத் தேடிச் சென்றார்? என கேள்வி எழுப்பினார்.

நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்து சீனிவாசன் காட்டம் தெரிவித்தார். கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு விஜய் வழங்கிய ₹5 லட்சம் என்பது பிச்சை காசு. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ₹1 கோடி இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் விஜய் செய்து தர வேண்டும். விஜய் தரப்பில் 30% அல்லது 50% வாக்கு இருப்பதாகச் சொல்வது வெறும் கைத்தடிகள் பேச்சு. 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் விஜய், அஜித், சூரியை பார்த்துச் சிரிப்பார்கள்; ஆனால் அவர்கள் ஓட்டுப் போட முடியாது. விஜய்யின் அரசியல் பயணத்திற்கு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களை பயன்படுத்துவது பகல் கனவு. எங்கள் தொண்டர்களை அவர் இழுக்க முடியாது.

இதையும் படிங்க: "பனையூர் பண்ணையாரே... ஓரமா போய் விளையாடுங்க! விஜய்யை வெளுத்து வாங்கிய அதிமுக ஐடி விங்..!

மகளிர் உரிமைத் தொகை: ₹5000 வழங்கியது ராஜதந்திரம் அல்ல, மக்களின் பணத்தை மக்களுக்கே கொடுத்து ஓட்டு வாங்கும் முயற்சி. இது கோடைக்கால நிவாரணம் போன்றது. போராடும் அரசு ஊழியர்களை அதிமுகவே காப்பாற்றும். தேமுதிக விரைவில் அதிமுக கூட்டணிக்கு வந்துவிடுவார்கள். எல். முருகன் அவர்கள் பிரேமலதாவுடன் பேசிக்கொண்டிருப்பதாகத் தகவல் உள்ளது. ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, பாம்பின் காது பாம்பு அறியும் என்ற பழமொழியை சுட்டிக்காட்டி, டிடிவி தினகரன் சொல்வதே சரியாக இருக்கும் என்றார்.

மாணிக்கம் தாகூர் மற்றும் திமுகவினர் இடையேயான மோதலில், சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி எடுப்பதே இறுதி முடிவாக இருக்கும். பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கூட்டங்கள் பாதுகாப்பாகவும் பந்தல் வசதியுடனும் நடக்கிறது. ஆனால், விஜய்யின் கூட்டங்களில் ஆம்புலன்ஸ் பெயரளவில் மட்டுமே உள்ளது, மக்கள் வெயிலில் கஷ்டப்படுகின்றனர். சசிகலா தனிக்கட்சி தொடங்குவது மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு, குழந்தை பிறக்கட்டும்; அது ஆணா, பெண்ணா என்று பார்த்துவிட்டுப் பெயர் வைப்போம். அதுவரை No Comments என்று தனது பாணியில் பதிலளித்தார்.
 

இதையும் படிங்க: கூட்டணி குறித்து தலைவர் தான் முடிவெடுப்பார்! சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share