#BREAKING ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி... மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு... காரணம் என்ன?
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளி தீ குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில பிரச்சனை தொடர்பாக மனு அளிக்க வந்த மாற்று திறனாளி தீ குளிப்பு. தீ காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை
மாற்றுத்திறனாளி தீக்குளிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மாதரசனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் 45, இவர் மாற்று திறனாளி. இவரது கிராமத்தில் இருவருக்கு அருகே சொந்தமான நிலம் சம்மந்தமாக வேறு ஒரு நபருக்கும் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வெங்கடேசன் திடிரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீயில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் அங்கிருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அவரை மீட்டு ஆம்பிலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் அதிபயங்கரம்; பெட்ஷீட், தென்னை ஓலைகளால் சுற்றி 2 இளைஞர்கள் எரித்து கொலை? - 2 கோர உடல்கள் கண்டுபிடிப்பு...!
நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனு அளிக்க வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மாதரசனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான வெங்கடேஷ் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த வெங்கடேஷ், தன்னுடன் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்ய முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத நிலையில் பார்த்த அங்கிருந்த பொதுமக்களும் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று அவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும், அவரது ஆடைகள் மற்றும் உடலின் பல பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். முதற்கட்ட தகவல்களின் படி, வெங்கடேஷுக்கு சொந்தமான பட்டா நிலத்தை அளவீடு செய்வதற்காக அவர் விண்ணப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதே பகுதியைச் சேர்ந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது. மேலும், இன்று காலை வெங்கடேஷை எதிர்த்தரப்பினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது கை, கால் மற்றும் உடலின் பல பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடலின் தோல் பகுதிகளும் கருகிய நிலையில் காணப்பட்டன. தற்போது அவருக்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீக்காயத்தின் அளவை பொறுத்து அவர் தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெறுவாரா அல்லது மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுவாரா என்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?... பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு....!