×
 

``இதான் நம்பர்.. ஒரு கால் அடிச்சா போதும்’’ - தேர்தல் பரபரப்புக்கு இடையே முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக...!

சட்டமன்ற தேர்தலை கையாள திமுக சார்பில் தேர்தல் வார்ரூம் அமைக்கப்பட்டிருக்கிறது. 

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க  “வார் ரூம்” அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார் ரூம், திமுக கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம்வில் செயல்படுகிறது.

சட்டமன்றத் தேர்தலைச் சிறப்பாக கையாளவும், கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்கவும் இந்த வார் ரூம் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும், அல்லது களத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தேவைப்பட்டாலும், அவர்கள் இந்த வார் ரூமை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, திமுக சார்பில் 8069446900 என்ற தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணின் மூலம் கட்சி நிர்வாகிகள் தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும், புகார்கள் இருந்தால் அவற்றை பதிவு செய்யவும் முடியும்.

பொதுவாக தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் வார் ரூம் அமைத்து, மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகளின் பணிகளை ஒருங்கிணைப்பது வழக்கம். அதன்படி, திமுகவும் தனது நிர்வாக செயல்பாடுகளை மையப்படுத்தி, மாவட்ட மட்டத்திலிருந்து வரும் தகவல்கள் மற்றும் புகார்களை ஒருங்கிணைத்து, தலைமைக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் இந்த வார் ரூமை அமைத்துள்ளது.

இதையும் படிங்க: பாமகவில் நடக்கும் குழப்பத்திற்கு ஸ்டாலினும், சபரீசனும் தான் காரணம்! அன்புமணி பகீர் குற்ற்ச்சாட்டு!

மேலும், மாவட்ட அளவிலான பிரச்சனைகள் தொடர்பாகவும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவை தலைமை வார் ரூமுக்கு அனுப்பப்படும். இதன் மூலம் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களது கருத்துகள் மற்றும் புகார்களை நேரடியாக தலைமைக்கு கொண்டு செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மொத்தத்தில், அண்ணா அறிவாலயத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த வார் ரூம், சட்டமன்றத் தேர்தலை திறம்பட கையாளவும், கட்சியின் அமைப்பு வலிமையை மேம்படுத்தவும் முக்கிய பங்காற்றும் எனக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: பாஜக பிடியில் முழுமையாக சிக்கிய அதிமுக..! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share