×
 

திமுக கல்வியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் அணி பொறுப்பாளர்கள் நியமனம்... தலைமை கழகம் அறிவிப்பு

திமுக கல்வியாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அணையின் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், புதிதாக கல்வியாளர்கள் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி ஆகிய இரு அணிகளை உருவாக்கியது. இதற்கு முன், திமுகவில் 23 அணிகள் செயல்பட்டு வந்த நிலையில், இந்த இரு புதிய அணிகள் அக்கட்சியின் அமைப்பு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டன.

கல்வித்துறையில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், கல்வியாளர்களின் நலனை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு ஆதரவு அளிக்கவும் கல்வியாளர்கள் அணி உருவாக்கப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அரசின் நலத்திட்டங்களை அவர்களுக்கு எடுத்துச் செல்லவும் மாற்றுத்திறனாளிகள் அணி உருவாக்கப்பட்டது. 

இதையும் படிங்க: உங்க அம்மா, பொண்டாட்டிய பத்தி பேசுனா இப்படிதான் பிண்டம் மாதிரி இருப்பீங்களா? ஆர்.எஸ் பாரதி கடும் சாடல்...

இந்த நிலையில், திமுகவின் கல்வியாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அணியின் பொறுப்பாளர்களை தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன்படி கல்வியாளர்கள் அணியின் தலைவராக செந்தலை கௌதமனும், செயலாளராக தமிழச்சி தங்கபாண்டியனும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோல், திமுக மாற்றுத்திறனாளிகள் அணியின் தலைவராக தங்கமும், செயலாளராக டி.எம்.என். தீபக் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியால் அண்ணாவுக்கு அவமானம்... பாஜகவுக்கு அதிமுக அடிமையானதாக அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share