×
 

சூடுபிடித்த கரூர் விவகாரம்: விஜயின் குற்றச்சாட்டு.. ஆதார வீடியோ வெளியிட்டு திமுக நெத்தியடி பதில்..!!

அப்பாவி மக்களை அரசியல் பகடைக்காயாக்கி இப்படியொரு அரசியல் தேவை விஜய் சாருக்கு இருக்கிறதா?

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட துயரச் சம்பவத்திற்கு முதல்வர் விஜய் தரப்பினர் போலீஸ் எச்சரிக்கையைப் புறக்கணித்து வாகனத்தை கூட்டத்திற்குள் கொண்டு சென்றதே முக்கிய காரணம் என திமுக ஐடி விங் தீவிரமாகக் குற்றம் சாட்டியுள்ளது. அப்பாவி மக்களை அரசியல் லாபத்திற்காக பலியிடுவது நியாயமா எனக் கேள்வி எழுப்பியுள்ள இந்த அமைப்பு, இரு வீடியோக்களை வெளியிட்டு முதல்வர் விஜயின் விளக்கங்களைப் பொய்யாக்க முயற்சித்துள்ளது.

முதல்வர் விஜய், நாமக்கல் மீட்டிங் முடிந்து கரூருக்கு வந்தபோது போலீஸ் தரப்பில் உரிய அலர்ட் கொடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். “கூட்டம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. கன்ட்ரோல் செய்ய முடியவில்லை. வராதீர்கள் என எச்சரித்திருக்கலாம். போலீஸ் விரும்பினால் மீட்டிங்கையே ரத்து செய்திருக்கலாம்” என்று அவர் தன் விளக்க வீடியோவில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடியாக திமுக ஐடி விங் வெளியிட்ட வீடியோவில் கரூர் டிஎஸ்பி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரியின் பேட்டி இடம் பெற்றுள்ளது. அந்த அதிகாரி கூறுகையில், “மேம்பாலத்திலிருந்து பேசும் இடம் வரை டீமுடன் தொடர்புகொண்டு வந்தார் டிஎஸ்பி. 50 மீட்டர் தொலைவில் நிறுத்தி பேசுமாறு விஜய் தரப்பினரிடம் தெளிவாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ‘சார், இங்கேயே நிறுத்திக்கொள்ளலாம். இதற்கு மேல் வேண்டாம். கூட்டம் அதிகம்’ என்று கூறியும், ஆர்கனைசர்கள் மறுத்தனர். ‘அந்த பாயிண்டுக்குத்தான் செல்ல வேண்டும். இங்கிருந்து பேசினால் கவரேஜ் சரியாக இருக்காது, மைக் ஒலி எட்டாது’ என்று பிடிவாதம் செய்தனர். அதனால்தான் வாகனத்தை மெதுவாக முன்னோக்கி நகர்த்தி, கூட்டத்தை இருபுறமும் தள்ளிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று விளக்கினார்.

இதையும் படிங்க: கரூர் அரசு வேலை அறிவிப்பு... இது இழப்பீடா? அரசியல் லஞ்சமா?" – டிடிவி தினகரன் காட்டம்!

இந்த வீடியோவைப் பகிர்ந்த திமுக ஐடி விங், “காவல்துறையின் தெளிவான எச்சரிக்கையை மீறி வாகனத்தை கூட்டத்துக்குள் அழைத்துச் சென்றதே கரூர் துயரத்திற்கு முக்கிய காரணம். அப்பாவி மக்களை அரசியல் பகடைக்காயாக்கி இப்படியொரு அரசியல் தேவை விஜய் சாருக்கு இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

https://twitter.com/i/status/2075492537150898524

மேலும், முதல்வர் விஜய் தன் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்ட வீடியோவையும் திமுக ஐடி விங் எதிர்தாக்குதலுக்குப் பயன்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் “30 பேர் செத்துவிட்டார்களாம் சார், பதில் சொல்லுங்கள்” என்று கேட்டபோது விஜய் எந்த பதிலும் அளிக்காமல் விலகிச் சென்ற காட்சியைச் சுட்டிக்காட்டியுள்ளனர். “வலியுடன் இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டான் என்கிறீர்களா?” என்று விஜய் கேட்டதற்கு, “அன்று நீங்கள் ஓடித்தான் போனீர்கள் CM அங்கிள்!” என திமுக ஐடி விங் கிண்டலாக பதிலளித்துள்ளது.

இந்த சம்பவங்கள் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. போலீஸ் நடவடிக்கை மற்றும் அரசியல் தலைவர்களின் பொறுப்பு குறித்து பலத்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான உண்மைகள் வெளிவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். 

இதையும் படிங்க: ஆதவ்-வின் கணக்கு..! "கரூர் வழக்கில் வாய்ப்பூட்டு கோரும் திமுக... உச்சநீதிமன்றத்தை நாடியதால் பரபரப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share