×
 

மனிதாபிமானமே இல்லையா உங்களுக்கு? விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆதங்கம்...

தெரு நாய்களை சிறை பிடிக்கும் நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

தெரு நாய்களை சிறைபிடிக்கும் உத்தரவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தெரு நாய்களை இதுபோல செய்வது மனிதாபிமானமற்ற செயல் என்றும் குற்றம் சாட்டின. தெரு நாய்களை சிறைபிடிக்கும் நடவடிக்கையை கண்டித்து சென்னையில் என்ற பேரணி நடைபெற்ற போது, ஏராளமான விலங்குகள் நல ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்தியாவில் தெரு நாய்கள் தொடர்பான பிரச்சினைகள் நீண்ட காலமாக பொது விவாதத்திற்கு உட்பட்டவை. குறிப்பாக, தெரு நாய்களின் தாக்குதலால் குழந்தைகள், முதியோர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவது, ரேபிஸ் நோய் பரவுதல், சாலை விபத்துகள் போன்றவை தொடர்ந்து புகார்களாக எழுந்து வந்துள்ளன. உச்ச நீதிமன்றம் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலப் பகுதிகளில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், ரேபிஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தவும் பிறப்பிக்கப்பட்டது. 

அனைத்து தெரு நாய்களையும், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் உள்ளவற்றை, 8 வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். போதுமான பணியாளர்கள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு உள்ள காப்பகங்களை உடனடியாக அமைக்க வேண்டும். இந்தக் காப்பகங்களில் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செய்யப்பட வேண்டும்.

இதையும் படிங்க: ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்த கோரி வழக்கு.. தலைமை கால்நடை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு..!!

 கருத்தடை செய்யப்பட்ட பிறகு நாய்களை மீண்டும் தெருக்களில் விடுவிக்கக் கூடாது. இது முந்தைய விலங்கு கருத்தடை கட்டுப்பாட்டு விதிகளுக்கு மாறாக உள்ளது. தெரு நாய்களைப் பிடிக்கும் செயல்முறையைத் தடுக்கும் தனிநபர்கள் அல்லது அமைப்புகள் மீது ,கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாய்க்கடி மற்றும் ரேபிஸ் தொடர்பான புகார்களுக்கு ஒரு வாரத்திற்குள் ஹெல்ப்லைன் அமைக்கப்பட வேண்டும். அதிகாரிகள் இந்தப் புகார்களுக்கு நான்கு மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும். ரேபிஸ் தடுப்பூசிகளின் இருப்பு மற்றும் கிடைக்கும் தன்மை குறித்த விரிவான அறிக்கையை அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

 தெரு நாய்களை சிறைபிடிக்கும் உத்தரவை எதிர்த்து சென்னையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் பேரணி நடத்தினர். சென்னை புதுப்பேட்டையில் இருந்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் வரை 500க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர். அப்போது, நாய்களை சிறைபிடிக்கும் நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என்று குற்றம் சாட்டினர். தெரு நாய்கள் தங்களை தற்காத்துக் கொள்ளதான் பொதுமக்களை கடிப்பதாகவும், இதுபோன்ற வஞ்சிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது என்றும் வலியுறுத்தினர். போதைப் பொருள் விழிப்புணர்வை போல திரையரங்கங்களில் நாய் கடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

இதையும் படிங்க: தெரு நாய்கள் பாவம் இல்லையா? சென்னையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் பேரணி…

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share