×
 

EVER GREEN..! சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து… போக்குவரத்து கழகம் டெண்டர்..!

18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டபுள் டக்கர் பேருந்து இயக்கப்படவுள்ளன.

சென்னையின் சாலைகளில் ஒரு காலத்தில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த டபுள் டெக்கர் பேருந்துகள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் தோன்ற உள்ளன. இம்முறை அவை முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் நவீன வடிவில் வருகின்றன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இது நகரின் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகளின் வரலாறு 1970களுக்கு முந்தையது. அப்போது இவை நகரின் அடையாளமாக விளங்கின. 1980களில் சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இவை, 1997இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு, உயர்நீதிமன்றம் முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் இயக்கப்பட்டன. ஆனால், போக்குவரத்து நெரிசல், மேம்பாலங்கள் கட்டுமானம் போன்ற காரணங்களால் 2008இல் இவை முற்றிலும் நிறுத்தப்பட்டன.

அதன்பிறகு பல ஆண்டுகளாக இவற்றைப் பார்க்க முடியவில்லை. இப்போது, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இவை மீண்டும் வருகின்றன என்பது சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த முறை இவை மின்சார பேருந்துகளாக வருவதால், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 20 மின்சார டபுள் டெக்கர் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. சென்னை போக்குவரத்து கழகம் இதற்கான டெண்டர் வழங்கி உள்ளது.

இதையும் படிங்க: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே... சென்னையில் AI பயிற்சி... முழு விவரம்...!

ஏற்கனவே 2023இல் இதுபோன்ற ஒரு பேருந்தின் சோதனை ஓட்டம் சென்னை சாலைகளில் நடத்தப்பட்டது. அது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது.இந்தப் பேருந்துகள் வார நாட்களில் அதிக பயணிகள் செல்லும் வழித்தடங்களில் இயக்கப்படும். வார இறுதி நாட்களில் சுற்றுலா வழித்தடங்களில், குறிப்பாக அண்ணா சாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக மகாபலிபுரம் வரை இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: புத்தாண்டை வரவேற்ற மழை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share