லாக்அப் டெத்! ஜெய்பீம் பார்த்து REVIEW எழுதுன ஸ்டாலின் எங்க போனாரு.. கொந்தளித்த எடப்பாடி..!
காவல்நிலைய விசாரணைக்கு சென்ற இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த அஜித் குமார் தனது தாயின் நகையை திருட முயன்றதாக பெண் ஒருவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அஜித் குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் காவல் நிலையத்தில் அஜித் குமார் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: MLA அமுல் கந்தசாமி மறைவு..! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு..!
ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது என சினிமா Review எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின் எங்கே இருக்கிறார் என கேள்வி எழுப்பிய அவர், விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள் என்றும் இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா எனவும் கேள்வி எழுப்பினார்.
தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு கண்டனம் தெரிவிப்பதாக சாடிய அவர், அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அடுத்த வீட்டு ஜன்னலை எட்டி பாக்குறதுலாம்... திமுகவை லெப்ட் ரைட் வாங்கிய எச். ராஜா!