வாக்குப்பதிவு எந்திரங்கள்..! STRONG ROOM- களில் வைத்து சீல் வைத்த அதிகாரிகள்..!!
வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம்களில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்த பிறகு, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தடம் (VVPAT) கருவிகள் கவனமாக கையாளப்பட்டன.
வாக்குப்பதிவு முடிவடைந்த உடனேயே, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் presiding officer முன்னிலையில் இந்த இயந்திரங்கள் முறையாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இந்தச் செயல்முறையின்போது, அந்தத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் முகவர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்து, சீல் வைக்கும் நடைமுறையை கண்காணித்தனர்.
இதன் மூலம், வாக்குகள் எந்தவித மாற்றமும் இன்றி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு, EVM-களின் கண்ட்ரோல் யூனிட் மற்றும் பேலட் யூனிட் ஆகியவை தனித்தனியே பாதுகாப்பான கேரியிங் கேஸ்களில் வைக்கப்பட்டு, அவற்றின் மீது சிறப்பு பிங்க் பேப்பர் சீல்கள் ஒட்டப்பட்டன. இந்தச் சீல்களில் தனித்துவமான எண்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி தரப்பில் பணப்பட்டுவாடா..! தேர்தலை நிறுத்தனும்..! அதிமுக வேட்பாளர் தர்ணா..!!
சீல் வைக்கும் போது, polling agents-களின் கையொப்பங்கள் பெறப்பட்டன. மேலும், Form-17C பகுதி-1 இல் வாக்குப்பதிவு விவரங்கள், EVM-களின் சீரியல் எண்கள் மற்றும் சீல் எண்கள் போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் நகல் அந்த வாக்குச்சாவடியில் இருந்த polling agents-களுக்கு வழங்கப்பட்டது. இந்த நடைமுறை முழுவதும் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது.
இதையும் படிங்க: 2026 தேர்தல்..! 3 நாட்கள் மது கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு..!