கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!
கஞ்சா போதையில் இளைஞர்கள் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீசார் சுட்டு பிடித்தனர். மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில்., போதைப் பொருள் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ள ஸ்டாலின் மாடல் ஆட்சியில், 80 வயது மூதாட்டியைக் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அவலம். 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கே போகிறது என்று தெரியாத நிலையிலேயே உள்ளது என கூறினார்.
இதுபோன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும், கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின், இனியும் போதைப்பொருள் ஒழிக்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு துளியும் இல்லை. 6 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை, அவர்களே அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவலச் சூழலை தமிழகத்தில் ஏற்படுத்திய இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இதையும் படிங்க: பூதாகரமாக வெடிக்கும் பாலியல் சம்பவம்! தெய்வ சாயலை கட்சி பொறுப்பில் இருந்து விடுத்த திமுக
இதுபோன்ற சம்பவங்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ள போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காத, காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இப்படிப்பட்ட கேவலமான ஆட்சியைக் கண்டு கொதிப்படைந்துள்ள மக்கள், இதற்கான தண்டனையை நிச்சயம் 2026-ல் இந்த திமுக அரசுக்கு வழங்கத் தான் போகிறார்கள். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார்.
இதையும் படிங்க: குறட்டை விட்டு தூக்கம்.. கல்வி நிதியை கோட்டைவிட்ட தமிழக அரசு.. அன்புமணி அடுக்கடுக்கான புகார்!