ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம்... பிரதமர் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்.? மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி.!!
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன் என்று மாணிக்கம் தாகூர் கேட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ரூ.5.76 லட்சம் அபராதம் விதித்ததை கடுமையாக கண்டித்தார். இந்த நடவடிக்கை மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் நேரடியாக பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அத்துமீறி கைது செய்தல், சிறையில் அடைத்தல் மற்றும் அபராதம் விதித்தல் ஆகியவை இப்போது தொடர் கதையாக மாறிவிட்டதாக மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டார்.
நம் நாட்டு மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் வேலை செய்யும்போது அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், நீண்டகாலம் சிறையில் வைக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது என்று அவர் தெரிவித்தார். இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் குடும்பங்களை பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றன என்பதை அவர் வலியுறுத்தினார்.
ஏழை மீனவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு மீன் பிடிப்பை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில், இத்தகைய அபராதங்கள் அவர்களை மேலும் கடன் சுமைக்குள் தள்ளுவதாக அவர் கூறினார்.இந்தப் பிரச்சினையில் மத்திய அரசின் மௌனத்தை மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்தார். நம் மீனவர்களின் உரிமைக்காக அண்டை நாடான இலங்கையிடம் பிரதமர் நரேந்திர மோடி பேச மறுப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். சொந்த நாட்டு மீனவர்களை இலங்கை வதைக்கும்போது பிரதமர் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன் என்றும் அவர் கேட்டார்.
இதையும் படிங்க: மனித கழிவுகளால் மீன்கள் சாகவில்லை!அமைச்சர் கருத்தை எதிர்த்து 8 கிராம மீனவர்கள் கொந்தளிப்பு!
இது மத்திய அரசின் அலட்சியத்தையும், மீனவ சமூகத்தின் மீதான அக்கறையின்மையையும் வெளிப்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.ஏழை மீனவர்களின் அபராதத் தொகையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அவர்களை உடனடியாக விடுவிக்க பொறுப்பேற்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார். அரசு இந்தப் பொறுப்பை ஏற்காவிட்டால், மீனவர்கள் தொடர்ந்து துன்பத்திற்கு உள்ளாவார்கள் என்பதை அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: 11 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை பிடிப்பு..! ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ட்ரைக்..!