×
 

குட்கா, பான் மசாலா புகையிலைப் பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி..!

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குட்கா, பான் மசாலாவை ஒழிக்க தமிழக காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. 

தமிழ்நாட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் அடிப்படையில், புகையிலை மற்றும் நிகோடினை மூலப்பொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்களை விற்பதும், பதுக்குவதும், கொண்டு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இதையும் படிங்க: #BREAKING அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை.. EDக்கு இடியை இறக்கிய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!

அந்த வகையில், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு 2026-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி வரை குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான தடை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.

குறிப்பாக, புகையிலை அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால், கடந்த 2013-ம் ஆண்டில் இதற்கான தடை கொண்டு வரப்பட்டது. இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: கலாச்சாரத்தை காக்க என்ன செய்தார்கள்? திமுகவை மறைமுகமாக சீண்டி பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share