×
 

HIGH ALERT..! பறவைக்காய்ச்சல் எதிரொலி... கோழி பண்ணைகளில் தீவிர கண்காணிப்பு..!

பறவைக்காய்ச்சல் அதிகரித்து வருவதால் கோழி பண்ணை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் கோழிப் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் கடந்த சில வாரங்களாக காகங்கள் கொத்து கொத்தாக இறக்கும் நிகழ்வு பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த மர்மமான பறவை இறப்புகள் முதலில் அடையாறு பகுதியில், குறிப்பாக இந்திரா நகர் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள தெருக்களில் அதிகம் பதிவாகின.

மரங்களில் இருந்து நேரடியாக விழுந்து இறப்பது, சில நாட்களில் திடீரென பல காகங்கள் செத்துக் கிடப்பது போன்ற காட்சிகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தின. சில இடங்களில் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த இறப்புகளின் காரணத்தை கண்டறிய தமிழ்நாடு கால்நடைத் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பூபால் நகரில் உள்ள ICAR ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக ஆபத்துள்ள H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரவுகிறது.

இதையும் படிங்க: சென்னையில் பறவை காய்ச்சல்..! கொத்து கொத்தாக மடியும் காகங்கள்… சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு..!

தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோழிப் பண்ணைகளில் வெளியாட்கள், வாகனங்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டது. உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் பண்ணை வளாகங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சென்னையில் பறவை காய்ச்சல்..! கொத்து கொத்தாக மடியும் காகங்கள்… சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share