இனி TVK தான்..! திமுகவுக்கு ஓட்டு போடுவது ஆறாவது கடமையா..? நிருபர் கேள்வியால் காதர் மொய்தின் ஆவேசம்..!
திமுகவுடன் கூட்டணி இல்லை என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தின் அறிவித்தார்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள கூட்டணி அரசியல் மாற்றங்கள் பல புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று, தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட சம்பவம். இது தமிழ்நாட்டில் முதன்முறையாக முஸ்லிம் லீக் கட்சி ஒரு ஆளும் கூட்டணி அரசின் அமைச்சரவையில் இடம் பெறும் வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக தனித்து பெரும்பான்மை பெறாத நிலையில், பல்வேறு கட்சிகளின் ஆதரவை நாடியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து தவெகவுக்கு உடனடி ஆதரவு அளிக்கத் தயங்கியது. ஆனால், பின்னர் தவெகவின் மதச்சார்பற்ற நிலைப்பாட்டைப் பாராட்டி, ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்தது. ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் இந்த முடிவை அறிவித்தபோது, அக்கட்சியின் பங்கேற்பு தவெக அரசுக்கு கூடுதல் ஸ்திரத்தன்மையை அளித்தது.
இந்த ஆதரவின் ஒரு பகுதியாக, அமைச்சரவை விரிவாக்கத்தில் ஐயூஎம்எல் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. 2026 மே 22 அன்று, சென்னையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் முன்னிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஆ.மீ. ஷாஜகான் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை விவகாரத்தில் புதிய மோதல்..! நேரலையை துண்டிப்பதா..? சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!
இந்த நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறோம் என்று ஐ யூ எம் எல் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து விலகுவதாக இந்திய முஸ்லீம் லீக் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் இது தொடர்பாக உரையாற்றினார். அப்போது திமுக கூட்டணியில் இடம்பெற இயலாது என்று கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். நாங்கள் கேட்காத, எதிர்பாக்காத ஒன்றை தமிழக வெற்றிக்கழகம் தங்களுக்கு கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். ஓட்டு போட்டு ஜனநாயக கடமை நிறைவேற்றுவது இஸ்லாமியர்களின் ஆறாவது கடமை என்று கூறினேன் என்று தெரிவித்துள்ளார். திமுகவுக்கு ஓட்டு போடுவது ஆறாவது கடமை என்று கூறினீர்களே என நிருபர்கள் கேள்வி கேட்டபோது ஆவேசம் அடைந்தார்.
இதையும் படிங்க: எடப்பாடி கோட்டையில் விரிசல்.? பனையூருக்கு படையெடுத்த அதிமுகவினர்..! ஆதவ் உரை..!!