×
 

நிதி இல்லை என கூறி 328 பேராசிரியர்கள் பணிநீக்கம்! திமுக அரசை சாடும் அண்ணாமலை!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அவர்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 328 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக அரசின் இரட்டை நிலைப்பாட்டைத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அவர்கள் கடுமையாகச் சாடியுள்ளார். நிதிச் சுமையைக் காரணம் காட்டி ஆசிரியர்களை நீக்கிவிட்டு, அதே பல்கலைக்கழகத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியதாகக் கூறுவது மிகப்பெரிய நாடகம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த 328 உதவிப் பேராசிரியர்களை, நிதி நிலைமையைக் காரணம் காட்டி கடந்த ஜனவரி 31 அன்று திமுக அரசு அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது. ஆசிரியர்கள் இல்லாததால் கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழ் உள்ளிட்ட பாடங்களுக்கு வகுப்புகளே நடைபெறவில்லை. ஆனால், இன்று முதல் அகத்தேர்வுகள் (Internal Exams) தொடங்குகின்றன. வகுப்பே நடத்தாமல் மாணவர்களைத் தேர்வு எழுதச் சொல்வது கல்வி முறைக்கே இழைக்கப்படும் அவமானம்" என அண்ணாமலை விமர்சித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தற்காலிகப் பணியில் இருப்பவர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் எனத் தேர்தல் வாக்குறுதி எண் 153-ல் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அவர்களை நிரந்தரம் செய்வதற்குப் பதிலாகப் பணிநீக்கம் செய்திருப்பது ஊழியர்களுக்குச் செய்த துரோகம் என அவர் சாடியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி இல்லை என்று கூறும் அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல்கலைக்கழகத்தைத் தரம் உயர்த்த ₹1,380 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை என அவர் எள்ளி நகையாடியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் சுமார் 45.44% ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இது மாணவர்களின் கல்வியைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு..?? பின்னணி என்ன..??

பணிநீக்கம் செய்யப்பட்ட 328 பகுதிநேர ஆசிரியர்களையும் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தி, மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க வேண்டும் எனத் தமிழக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: அண்ணாமலை புதிய கட்சி தொடங்குகிறாரா? நெல்லையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share