×
 

தூக்கி ஓரமா வை ! வாள் கொடுத்த ரசிகர்... காண்டான கமல்...!!

ரசிகர்களுடன் சந்திப்பின்போது ஒருவர் வாள் கொண்டு வந்து கமல்ஹாசனிடம் வலுக்கட்டாயமாக கொடுக்க முற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம். பி ஆன பிறகு இன்று முதன்முறையாக ரசிகர்களை சந்தித்தார். கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்கள் கூறும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பூங்கொத்துகளை கொண்டு வர வேண்டாம் அதற்கு பதிலாக புத்தகங்களை கொண்டு வாருங்கள் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் விழாவின் மேடையில் கமல்ஹாசன் நின்று கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் கையில் வாளுடன் வந்து அதனை கமல் கையில் கொடுத்தார். 

இதையும் படிங்க: #DON'T WORRY.. 2026 நம்ம கையில! திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை!!

கமல்ஹாசன் அதனை வாங்க மறுத்து மேசையின் மீது வைக்கச் சொன்னார். அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அந்த ரசிகர் கமலின் கையில் வலுக்கட்டாயமாக கொடுக்க கோபமடைந்தார் கமல்ஹாசன். இதனை எடுத்து அங்கிருந்த கட்சி நிர்வாகிகளும் போலீசாரும் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு.. கட்சி பூசல் குறித்து ஆலோசனை?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share