திமுக தயவோடு அதிமுக ஆட்சி.? எடப்பாடிக்கு ஆதரவா..? கனிமொழி ஓபன் டாக்..!!
திமுகவின் தயவுடன் அதிமுக ஆட்சி அமைக்கிறது என்ற தகவல் வதந்தி என கனிமொழி தெரிவித்தார்.
திமுகவின் தயவுடன் ஆட்சி அமைக்கப் போவதாக பரவும் தகவல் வதந்தி என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிவுகள் மே நான்காம் தேதி வெளியானது. தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைத்த திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றது.
மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. வெற்றி பெற்றாலும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 இடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மேலும் பத்து இடங்கள் தேவைப்பட்டது.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தமிழக வெற்றி கழகத்தில் கூட்டணி அமைத்தது. இதன் மூலம் ஐந்து எம்எல்ஏக்கள் கூடுதலாக கிடைத்தனர். இருப்பினும் மேலும் ஐந்து எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சி அமைக்கப் போவதாக தகவல்களை பரவின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுகவைச் சார்ந்தவர்கள் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிந்தித்து ஓட்டு போடுங்க மக்களே..! வாக்களித்த பின் கனிமொழி எம்.பி பேட்டி..!
இந்த நிலையில், திமுக தயவோடு அதிமுக ஆட்சி அமைவதாக பரவும் தகவல் வதந்தி என்று திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காதது குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். ஆளுநரே தேவை இல்லை என்பது தான் திமுகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார். திமுக - அதிமுக கூட்டு என்ற வதந்திகளுக்கு பதில் கூற முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: இபிஎஸ் இங்க இல்ல! அடுத்த ஜென்மத்துல குஜராத்ல பிறக்கட்டும்! வெளுத்து வாங்கிய கனிமொழி!