×
 

அடிச்சு கொன்னுட்டீங்களே... அவரு என்ன தீவிரவாதியா? தமிழக அரசுக்கு கோர்ட் சரமாரி கேள்வி..!

திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட நபர் என்னை தீவிரவாதியா என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தவர் அஜித் குமார். இந்த கோவிலுக்கு மதுரையை சேர்ந்த மருத்துவர் நிக்கி என்பவர் தனது தாயுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது தனது தாயின் நகையை அஜித்குமார் திருட முயன்றதாக அவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் அஜித் குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் காவல் நிலையத்தில் அஜித் குமார் உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: எனக்கு இந்த லைஃப் வேணாம்.. மனதை ரணமாக்கும் மரண வாக்குமூலம்! புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சோகம்..!

இந்த சம்பவத்தை அடுத்து 6 காவலர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே, ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகி இருப்பதாகவும் காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக இந்த விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது, கடந்த நான்கு ஆண்டுகளில் 24 லாக்கப் மரணங்கள் என கூறப்படுகிறதே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அடித்துக் கொல்லப்பட்ட நபர் தீவிரவாதியா என்றும் அவரை தூக்கிச் சென்று அடித்து கொலை செய்துள்ளீர்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவரை இது போல் தாக்கியது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பதிலளிக்க அவகாசம் வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, மனுதாரர் மனுவாக பதிவு செய்து செய்யுங்கள், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன் என நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்! போலீஸ் ஸ்டேஷனிலேயே மிரட்டல்... களி திண்ண வைத்த போலீஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share