×
 

எனக்கு இந்த லைஃப் வேணாம்.. மனதை ரணமாக்கும் மரண வாக்குமூலம்! புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சோகம்..!

திருமணமாகி 78 நாட்களே ஆன புதுமணப்பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் திருமணமாகி 78 நாட்களை ஆன புதுமணப்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சேர்ந்தவர் ரிதன்யா. இவருக்கு கவின்குமார் என்பவரோடு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 78 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், கணவன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ரிதன்யாவை கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. 

இதனால் மனமடைந்து போன ரிதன்யா செய்வதறியாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே தனது காரை ஓட்டிச் சென்ற ரிதன்யா, தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் வழிபட்டுள்ளார். தொடர்ந்து சாலையோரமாக காரை நிறுத்திய அவர், தனது வாழ்க்கை தொடர்பாகவும், தனது சாவுக்கு யார் காரணம் என்பது தொடர்பாகவும் ஆடியோ ஒன்றை வாட்ஸ் அப் மூலம் தனது தந்தைக்கு அனுப்பி விட்டு தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்! போலீஸ் ஸ்டேஷனிலேயே மிரட்டல்... களி திண்ண வைத்த போலீஸ்!

தனது திருமண வாழ்க்கை சரியாக இல்லை என்றும் ஒருவனுக்கு ஒருத்தி தான் என்ற ஆடியோவையும் ரிதன்யா அனுப்பி உள்ளார். மேலும், கணவன் கவின்குமார் மற்றும் மாமனார் கிருஷ்ணமூர்த்தி மாமியார் சித்ராதேவி ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக ரிதன்யா வேதனை தெரிவித்துள்ளார். இனியும் தன்னால் வாழ முடியாது என தந்தைக்கு ஆடியோ அனுப்பி வைத்துவிட்டு ரிதன்யா எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறியும் சென்ற சேயூர் போலீசார் ரிதன்யாவின் உடலையும் காரையும் ஈட்டுச்சென்று முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். 

தந்தைக்கு ரிதன்யா அனுப்பிய ஆடியோவில் பேசியதாவது; இதுதான் சாக்குனு உங்கள அசிங்கப்படுத்த நினைப்பாங்க. இதை யார் முன்னாடி வேண்டுமானாலும் போட்டு காமிங்க. என்னுடைய இந்த முடிவுக்கு தனது திருமண வாழ்க்கை தான் உண்மையான காரணம். அவங்களும் அவங்க குடும்பமும் தான் காரணம்.,போதும்...உடல் ரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சுட்டேன், மனரீதியாகவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன். எனக்கு வேண்டாம் இந்த லைஃப். அதெல்லாம் அவங்க மாற மாட்டாங்க. என்னோட இந்த முடிவுக்கு கவினும், ஈஸ்வரமூர்த்தியும், சித்ராதேவியும் தான் காரணம். என் கல்யாண வாழ்க்கையே மோசமா போயிருச்சு. என்னை மன்னிச்சிருங்க அப்பா. என்னை மன்னிச்சிருங்க அம்மா. என ரிதன்யா கதறி அழுது கொண்டே பேசிய ஆடியோ மனதை மிகவும் ரணமாக்கும் வகையில் அமைந்தது. 

என்ன இருந்தாலும் தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை மனதில் உறுதியோடு கொண்டு வாழ்க்கையை எதிர்கொண்டு இருக்கலாமே என்பதும் பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் எவ்வளவு பெரிய தண்டனையாக இது அமைந்துள்ளது எனவும் சம்பவத்தை அறிந்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவு? 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share