கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க... மா. சு. எச்சரிக்கை...!
கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் இந்த சோக சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன. 1 முதல் 7 வயது வரையிலான குழந்தைகள் லேசான காய்ச்சல், இருமல் காரணமாக உள்ளூர் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றனர். அப்போது அளிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப் மற்றும் 'நெக்ஸ்ட்ரோ-டிஎஸ் என்ற இருமல் மருந்துகளை உட்கொண்ட பிறகு, அவற்றின் நிலைமை திடீரென மோசமடைந்தது.
சிறுநீர் வெளியேறாமை, சிறுநீரகத் தொற்று, வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றின. பவர் அருகிலுள்ள மகாராஷ்டிராவின் நாக்பூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 3 குழந்தைகள் டயலிசிஸ் சிகிச்சை பெற்றபோதிலும் உயிரிழந்தனர். இப்படி இதுவரை 11 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அணுகுமுறை குழுக்கள் சிந்த்வாராவில் விசாரணை நடத்தி, மருந்து மாத்திரைகளை சேகரித்துள்ளன. மேலும் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மத்திய பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆகியவை இந்த மருந்துகளின் தரத்தை சோதித்து வருகின்றன.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் வதந்தி... யூடியூபர் மாரிதாஸ் அதிரடி கைது... வேட்டையை தொடரும் போலீஸ்...!
கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுரை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
கோல்ட்ரிப் இருமல் மருந்து தமிழகத்தில் விற்பனையாகி வருகிறதா என்பது குறித்தும் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். காலாவதியான மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்கிற ரீதியிலும் விசாரணை நடைபெறுகிறது என்று கூறினார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மேல ஏன் பழி போடுறீங்க? என்ன நடந்துச்சு பாத்தீங்களா... கே.எஸ் அழகிரி விளக்கம்!