கேள்வியா கேக்குற..? பணப்பட்டுவாடாவை தட்டி கேட்ட அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு..!
பண பட்டுவாடாவை தடுக்க கேள்வி கேட்ட அதிமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மதுரவாயல் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தட்டிக் கேட்ட அதிமுக மாவட்ட பிரதிநிதி மீது அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை முடித்து வேட்பாளர்களை அறிவித்தனர். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வந்தனர். திமுக, அதிமுக என் பல கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மிக தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்தன. நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. தேர்தல் அதிகாரிகளும் பண பட்டுவாடாவை தவிர்க்க பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ராயபுரம் தொகுதியில் ஓட்டுக்கு 1000 ரூபாய்.? அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என குற்றச்சாட்டு..!!
இந்த நிலையில், சென்னை மதுரவாயல் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்களை தட்டி கேட்டு அதிமுக பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுகவினர் பண பட்டுவாடா செய்ததை தட்டிக் கேட்டதில் அதிமுக மாவட்ட பிரதிநிதி நீலமேகத்திற்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அதிமுக பிரமுகர் நீலமேகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் பிடித்து காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பணப்பட்டுவாடாவை தட்டி கேட்ட அதிமுக நிர்வாகி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு குக்கர்..! அதிரடியாக பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை..!