கூட்டணியை முறித்த மதிமுக..! "வைகோ எடுத்த முடிவு தவறு"... MLA ராஜேந்திரன் அதிருப்தி..!!
வைகோ எடுத்த முடிவு தவறு என மதிமுக MLA ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதிமுகவும் திமுகவும் நீண்டகாலமாக திராவிட இயக்க பின்னணியைப் பகிர்ந்துகொண்டாலும், வைகோவின் கட்சி 2017-ம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான முற்போக்கு சமூக நீதிக் கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வந்தது. 2026 தேர்தலில் மதிமுக நான்கு தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.
இருப்பினும், கூட்டணியில் மதிமுகவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், தொகுதி ஒதுக்கீடு மற்றும் சுய சின்னத்தில் போட்டியிட அனுமதி மறுப்பு போன்றவை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தின. வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். சிறிய கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், மதிமுக தனது சுயமரியாதையை இழந்து கூட்டணியில் தொடர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் வைகோ பகிரங்கமாகக் கூறியிருந்தார்.
குறிப்பாக, தேர்தலில் பிற கட்சிகள் தங்கள் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட போது மதிமுக மட்டும் உதயசூரியன் சின்னத்தில் நிர்பந்திக்கப்பட்டது பெரும் வலியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: திமுகவுக்கு குட்பை..! கூட்டணியிலிருந்து விலகுவதாக மதிமுக அதிரடி அறிவிப்பு..!!
வைகோ எடுத்த முடிவு தவறு என MLA ராஜேந்திரன் கூறியுள்ளார். கட்சி, சாதி, மதம் கடந்து நம்மை வெற்றி பெறச் செய்த கடையநல்லூர் மக்களின் உணர்வுகளை மதித்து பதவி விலகும் முடிவை மறுத்துவிட்டேன் என்றும் கூறினார். இதனால், மதிமுக-வின் பொதுக்குழுவில் என்னால் கலந்துகொள்ள முடியாது என்பதையும் வைகோவிடம் தெரிவித்துவிட்டேன் எனவும் தெரிவித்தார். கூட்டணியை விட்டு மதிமுக வெளியேறிய நிலையில், தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்ற, ம.தி.மு.க கடையநல்லூர் எம்.எல்.ஏ., தி.மு. ராசேந்திரன் அதிருப்தி தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூட்டணி முறிவா..? தனித்து விடப்படுமா திமுக..? இன்று மதிமுக உயர்நிலை குழுக் கூட்டம்..!