×
 

கூட்டணி முறிவா..? தனித்து விடப்படுமா திமுக..? இன்று மதிமுக உயர்நிலை குழுக் கூட்டம்..!

இன்று மதிமுக உயர்நிலை குழு கூட்டம் நடைபெறுகிறது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறுகிறது. கட்சியின் அவைத் தலைவர் ஆ. அர்ஜுனராஜ் தலைமையில் இந்தக் கூட்டம் கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் களத்தில் தற்போது நிலவும் பல்வேறு மாற்றங்கள் மத்தியில் இந்தக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கட்சியின் பொதுச் செயலர் வைகோவின் அறிவிப்பின்படி, உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகள் மற்றும் எதிர்காலக் கூட்டணி வாய்ப்புகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக தொடர்வதா அல்லது புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்வதா என்பது போன்ற முக்கியமான விவாதங்கள் இங்கு இடம்பெறலாம். 

அண்மைய மாதங்களில் மதிமுக தலைவர்கள் வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளை அறிந்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்து வந்தனர். உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் உடன் இணைவது குறித்த சாத்தியக் கூறுகள் மற்றும் திமுக உடனான உறவு தொடர்பான விவாதங்கள் ஏற்கெனவே அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக இருந்து வருகின்றன.

இதையும் படிங்க: "வேணாம்"..! புதிய நடுவர் மன்றத்தால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு..! வைகோ எச்சரிக்கை..!

இந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், வரும் ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அடிப்படையாக அமையும் எனக் கூறப்படுகிறது. தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கூட்டணி அரசியலின் புதிய சமன்பாடுகள் ஆகியவை மதிமுக போன்ற சிறு கட்சிகளுக்கு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்கியுள்ளன. 

இதையும் படிங்க: அமோனியா வாயு கசிவு.. விசாரணைக் குழு பரிந்துரைகளை கவனிக்கணும்..! வைகோ வலியுறுத்தல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share