எடப்பாடியின் கையில் 70 பேரின் ரத்தக்கறை… முழு சங்கி…! வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!
திருச்சியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளினரும் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று திருவாரூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இன்று திருச்சியில் திமுக வேட்பாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.என். நேரு மற்றும் இனிகோ இருதயராஜ் ஆகியோரே ஆதரித்த முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
பரப்புரையின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திற்கு ஞாயமான நிதியை கூட மத்திய பாஜக அரசு என்னும் விடுவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கொண்டுவந்த சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒடுக்கப்பட்ட போது 70 பேர் உயிரிழந்ததாகவும் சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒடுக்கப்பட்ட போது உயிரிழந்த 70 பேரின் ரத்தக்கறை எடப்பாடி பழனிச்சாமியின் கையில் படிந்திருப்பதாகவும் கூறினார்.
மதுரை பொதுக்கூட்டத்தில் பெரியார் படத்தை அகற்றியபோது சுயமரியாதை என்று அமைதியாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரிவித்துள்ளார். திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது என சிரித்துக் கொண்டே கூறியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்றும் அதிமுகவை அடிமை கூட்டமாக மாற்றி சாதனை படைத்த எடப்பாடி பழனிச்சாமி முழு சங்கியாகவே மாறிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் விஜய் ரகசிய கூட்டு... அமைச்சர் ராஜேந்திரன் கடும் தாக்கு...!
எம்எல்ஏக்களை குத்தகை எடுத்த முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பாதம் தாங்கியாக இருக்கிறார் என்றார். மத்திய பாஜக அரசின் சிஏஏ சட்டம் நிறைவேற உதவி துரோகம் செய்தது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அன்புமணி என்றும் நம்முடைய எதிரிகளையும் பாஜக உதிரிகளையும் ஒன்றாக வீழ்த்தி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜாடிக்கேத்த மூடி... மோடிக்கேத்த EPS..! பூந்து விளாசிய உதயநிதி..!!