×
 

எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? பாஜகவை திருத்துவோம்.. அறுதியிட்டு கூறிய முதல்வர்!

மதுரை வீரகனூரில் திமுக மாணவர் அணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கீழடி அகழாய்வு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றங்கரையில் 2013 முதல் நடைபெற்று வரும் ஒரு முக்கியமான தொல்லியல் ஆய்வாகும். இது தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை, குறிப்பாக கி.மு. 6-ஆம் நூற்றாண்டு வரையிலான எழுத்தறிவு மற்றும் நகர நாகரிகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு முதலில் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு, பின்னர் தமிழ்நாடு தொல்லியல் துறையால் தொடரப்பட்டது.

மத்திய கலாச்சார அமைச்சகம், அறிக்கையில் திருத்தங்கள் தேவை என்று கூறி, அதை மீண்டும் அனுப்பியதாகவும், அறிவியல்பூர்வமான கூடுதல் தரவுகள் தேவை என கூறியுள்ளது. கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடுவதில் மத்திய அரசின் மறுப்பு கூறி இருப்பது குறித்து பல விமர்சனங்களும் கருத்துக்களும் தமிழ்நாட்டில் எழுந்துள்ளன.

இதையும் படிங்க: நானும் டெல்டாக்காரன் தான்.. மார்தட்டிய முதல்வர்! தஞ்சைக்கு டாப் 3 அறிவிப்புகள் வெளியீடு..!

இந்த நிலையில், கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து , திமுக மாணவரணி சார்பில் நாளை காலை 10 மணி அளவில் மதுரை , வீரகனூர் சுற்றுச்சாலையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு., அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம் என தெரிவித்தார்.

இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல.,சில உள்ளங்களை எனவும் நாளை மதுரை வீரகனூரில் திமுக மாணவர் அணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்.,அவர்களைத் திருத்துவோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒன்றரை வருஷமா போராடி வரோம்! தஞ்சையில் முதல்வருக்கு கருப்பு கொடி காட்டிய விவசாயிகள்.. குண்டு கட்டாக கைது செய்த போலீஸ்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share