×
 

ஒன்றரை வருஷமா போராடி வரோம்! தஞ்சையில் முதல்வருக்கு கருப்பு கொடி காட்டிய விவசாயிகள்.. குண்டு கட்டாக கைது செய்த போலீஸ்!!

தஞ்சைக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்தார். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார். மேலும், முதல்வர் மருந்தகத்தில் திடீர் ஆய்வு செய்து, மருந்து இருப்பு மற்றும் சேவைத் தரத்தைப் பார்வையிட்டார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிலையில், இன்று தஞ்சாவூரில் போக்குவரத்து துறை சார்பில் புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது முதலமைச்சர் வருகையொட்டி கருப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். 

தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி பகுதியில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு எதிராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். தங்கள் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர், அமைச்சர்களிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த கருப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

இதையும் படிங்க: நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி.. தொடர்ந்து போராடுவோம்.. முதல்வர் ஸ்டாலின் சூளுரை!!

கருப்புக்கொடி காட்ட முயன்று அனைத்து விவசாயிகளையும் முதலமைச்சரின் வருகைக்கு முன்னதாகவே போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share