×
 

திமுகவின் சமூக காவலர்கள் நாடகம்..! தப்பி தவறி கூட சமூக நீதி- ன்னு சொல்லாதீங்க..! நயினார் ஆவேசம்..!

திமுக சமூகநீதி காவலர்கள் நாடகம் போடுவதாக நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா நினைவு நாள் என்றாலே தமிழ்நாட்டில் சமூகநீதி, சமத்துவம், சாதி பேதமின்மை ஆகிய கருத்துகளை நினைவூட்டும் ஒரு நாளாகும். அந்த நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் அரசு சார்பில் சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் எம். அப்பாவு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள்., குறிப்பாக நான்கு பேர் வரை இந்த சமபந்தி விருந்தில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்றும், கோயிலுக்குள் நுழையவே தடை விதிக்கப்பட்டது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தீண்டாமை போன்ற பழமையான பாகுபாட்டை நினைவூட்டுவதாக பலரால் விமர்சிக்கப்பட்டது. மேடை நாடகத்திற்கு மட்டும் சமூகநீதியை திமுக பயன்படுத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில், அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட அன்னதானத்திற்கு வந்த நரிக்குறவரின குழந்தைகளைத் திருக்கோவில் உள்ளேயே முதலில் அனுமதிக்காததோடு, பின் உணவும் வழங்காமல் பசியோடு அனுப்பியிருக்கிறது திமுக கும்பல் என்று சாடினார்.

இதையும் படிங்க: SIR… எங்களுக்கு நீதி கிடைக்கல… சுப்ரீம் கோர்ட்டில் மம்தா காரசார வாதம்..!

வயிற்றுப் பசிக்காக வந்த குழந்தைகளைக் கோவில் உள்ளே வந்தால் அடித்துவிடுவதாக மிரட்டுவது தான் திமுகவின் பகுத்தறிவா என்று கேட்டுள்ள நயினார், ஏழை எளிய பழங்குடியினக் குழந்தைகளைக் கோவிலுக்குள் வரவிடாமல் தடுப்பதும், அன்னதான உணவை சாப்பிட விடாமல் தடுப்பதும் தான் திமுகவின் சமூக நீதியா என்றும் சரமாரி கேள்விகளை முன் வைத்தார். சட்டப்பேரவையில் சமநிலையை உறுதி செய்வதில்லை, சமூகத்திலும் சமநிலையை உறுதி செய்வதில்லை, இது தான் சபாநாயகர் பதவியில் இருக்கும் ஒரு தலைவர் செய்யும் செயலா என்றும் வெட்கக்கேடு எனவும் தெரிவித்தார்.

பசுந்தோல் போர்த்திய புலியைப் போல சமூகநீதி காவலர்களாய் மேடையெங்கும் வேடமிடுவது, பின் சமூகத்தில் பின்தங்கிய ஏழை எளிய மக்களைத் தூக்கி வீசியெறிவது என நாடகமாடும் ஆதிக்க மனநிலை கொண்ட திமுக கும்பல் இனி தப்பித் தவறி கூட சமூகநீதி எனும் வார்த்தையை உரைக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! மத்திய அரசுக்கு அவ்வளவு பயமா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share