பெருகும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்... இதுதான் தலைகுனிய விடாத லட்சணமா? சாடிய நயினார் நாகேந்திரன்...!
திமுக ஆட்சியில் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சியில் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருத்தணியில் வடமாநில இளைஞர் ஒருவரை போதை இளைஞர்கள் கொடூரமாகத் தாக்கிய ரணம் ஆறும் முன்பே, கோவையில் உக்கடத்தைச் சேர்ந்த பஜித் கானும் அவரது நண்பரும் சரமாரியாகத் தாக்கியதில் கொல்கத்தா இளைஞர் சூரஜ் பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பெரும் கோட்பாட்டை உலகுக்குப் பறைசாற்றிய தமிழ் மண்ணில், உழைத்து முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் இம்மண்ணிற்குள் எண்ணற்ற கனவுகளோடு நுழைந்த புலம்பெயர் தொழிலாளிகள் சமூகவிரோதிகளால் தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் மிகுந்த வேதனை அளிப்பதாக நயினார் நாகேந்திரன் கூறினார்.
சமூகத்தில் இன மேலாண்மை வாதத்தையும், பிரிவினை விஷத்தையும் புலம்பெயர் தொழிலாளிகள் மீது பரப்பிய ஆளுங்கட்சி திமுகவினர் இந்த சம்பவங்களுக்கெல்லாம் மூல காரணகர்த்தாக்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் தமிழ்ச் சமூகத்தை போதையின் பாதையில் தள்ளி, இந்த நிலத்தைச் சீரழித்துவிட்டு தங்கள் குடும்பங்கள் மட்டும் அதிகாரத்தில் நிரந்தரமாக இருக்கும் என்று தப்புக் கணக்கு போடுகிறது ஒரு கூட்டம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என் பேரு எங்கய்யா? வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட முதியவர்...!
வாழ்வாதாரம் தேடி வந்தோரை வதைக்கும் அளவிற்கு வன்முறையின் மையமாகத் தமிழகத்தை மாற்றியதுதான் இந்த நான்கரை ஆண்டுகால திமுக அரசின் சாதனை என்று கூறியுள்ளார். இது தான் தமிழகத்தைத் தலைகுனிய விடாது தாங்கள் பார்த்துக் கொள்ளும் லட்சணமா இன்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: 17 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு... இனிமேதான் எங்க ஆட்டம் இருக்கு... நயினார் உறுதி...!