திமுக கூட்டணியில் விரிசல்..! அமைச்சரவையில் இடம் இல்லையாம்.. CM சொல்லிட்டாரே..! நயினார் பேட்டி..!
மதுரையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மார்ச் ஒன்றாம் தேதி மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே ஜனவரி மாதம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற முதல் என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக இப்போது மதுரையில் இரண்டாவது கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் இணைந்து பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வு தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணியின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பாஜக, அதிமுக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, தமமுக போன்ற கட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் சில புதிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தே.மு.தி.க உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பிரேமலதா விஜயகாந்த் போன்றோர் இந்த மேடையில் இடம்பெறுவார்களா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் வருகை இந்தக் கூட்டத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் சேர்க்கிறது.
இதையும் படிங்க: எடப்பாடி மோடியின் அடிமை..... தஞ்சையில் அதிமுக, பாஜகவை விளாசிய உதயநிதி!
இதனிடையே, மதுரையில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்திற்கு பந்தகால் நடப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், திமுக கூட்டணி தான் வலுவாக இல்லை என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருக்கிறது எனவும் தெரிவித்தார். திமுக கூட்டணியில் மோதல் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் கூட்டணி அமைச்சரவை கிடையாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதை அப்போது சுட்டிக்காட்டினார். டிஜிபியை கூட போட முடியாத அரசாக திமுக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் கொடுத்தது பிச்சை காசு திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் அதிரடி பேட்டி!