×
 

வருந்துகிறேன்..! த்ரிஷா குறித்து அவதூறு பேச்சு..! வருத்தம் தெரிவித்த நயினார்..!

நடிகை திரிஷா குறித்து கூறிய கருத்துக்கு நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்தார்.

விஜய் சேலத்தில் நடத்திய கூட்டத்தில் அரசியல் கட்சிகள் குறித்து பேசியதற்கு பதிலடியாக, நயினார் நாகேந்திரன் பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷா கிட்ட இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடக்க முடியும் என்று கூறினார். இந்த கருத்து நடிகை திரிஷாவின் பெயரை தனிப்பட்ட வாழ்க்கை சூழலுடன் இணைத்து, அவதூறாகவும் அநாகரிகமாகவும் பார்க்கப்பட்டது.

இந்த பேச்சு உடனடியாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இதை அரசியல் விமர்சனத்தின் எல்லையை மீறிய செயலாக கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, பெண்ணொருவரின் பெயரை இழுத்து அரசியல் எதிரியை தாக்குவது தரம் தாழ்ந்தது என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், விஜயுடன் தொடர்பு படுத்தி பேசியதற்கு நடிகை திரிஷா நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநில அரசியல் துறையில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்தை தெரிவித்திருப்பதாக கூறியுள்ளார். மனதை புண்படுத்தி இருப்பதாக கூறிய த்ரிஷா, தான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இல்லை என்றும் நடுநிலையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: தினுசு தினுசா குற்றங்கள்..! நீதிபதிக்கே பாதுகாப்பில்ல... மக்களுக்கு நிம்மதியில்ல..! சாடிய நயினார்..!

விஜய்யுடன் தொடர்புபடுத்தி கூறிய கருத்துக்கு வழக்கறிஞர் மூலம் நடிகை திரிஷா கண்டன அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்தார். நெல்லையில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். அப்போது, நடிகை திரிஷா குறித்த கருத்துக்காக மனப்பூர்வமாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா குறித்து நான் பேசியது தவறி வந்த வார்த்தை என்றும் கூறினார். தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் தனிநபர் விமர்சனத்தை யார் மீதும் இதுவரை வைத்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: அருவருப்பான பேச்சு..! திரிஷாவை விஜய்யுடன் தொடர்பு படுத்தி கருத்து... நயினாருக்கு கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share