நெல்லையை உலுக்கிய கொடூரம்... தந்தை - மகன் கொலை..! 11 பேர் மீது பாய்ந்த வழக்கு..!!
நெல்லையில் தந்தை, மகன் கொல்லப்பட்ட சம்பவத்தில் 11 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் தந்தை மற்றும் ஐந்து வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே காளிமுத்து என்பவரும் அவரது ஐந்து வயது மகனின் தலையை வெட்டி மர்ம கும்பல் கொலை செய்தது. தந்தை காளிமுத்துவின் தலையை துண்டித்து நடுரோட்டில் கொலையாளிகள் வைத்துச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
தனது மகன்களுடன் வைக்கில் சென்ற காளிமுத்துவை பின்னால் காரில் வந்து எடுத்து கீழே தள்ளி மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகனான ஜெயராஜை அந்த கும்பல் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
காளிமுத்துவின் தலையை மட்டும் கல்லிடைக்குறிச்சி - நெல்லை நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் வைத்து விட்டு அந்த கும்பல் சென்றிருப்பது நெல்லை மாவட்டத்தை பதற்றத்தில் ஆழ்த்தியது. பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
இதையும் படிங்க: அன்று வெட்டிய அதே இடத்தில்... நெல்லையை உலுக்கிய இரட்டைக்கொலை... பகை வளர்ந்ததன் பகீர் பின்னணி...!
கொலைக்கு காரணமான அந்த மர்ம கும்ப கும்பல் யார் என்பது தொடர்பாகவும் எதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டது என்பது குறித்தும் பின்புறத்தில் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பாகவும் முழு விவரத்தை பெற போலீசார் விசாரித்து வருகின்றனர். தந்தை - மகன் கொல்லப்பட்ட சம்பவத்தில், 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லையில் ரத்த வெறி... தந்தை-மகன் கொடூரக் கொலை..! தலையை வெட்டி நடுரோட்டில் வைத்து சென்ற மர்ம கும்பல்..!!