தலையை துண்டித்து கொடூரக் கொலை..! 3 பேர் அதிரடி ARREST..! நெல்லையை உலுக்கிய கோர்ச் சம்பவம்..!!
நெல்லை மாவட்டத்தில் தந்தையும், மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் தந்தை மற்றும் ஐந்து வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே காளிமுத்து என்பவரும் அவரது ஐந்து வயது மகனின் தலையை வெட்டி மர்ம கும்பல் கொலை செய்தது. தந்தை காளிமுத்துவின் தலையை துண்டித்து நடுரோட்டில் கொலையாளிகள் வைத்துச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. தனது மகன்களுடன் வைக்கில் சென்ற காளிமுத்துவை பின்னால் காரில் வந்து எடுத்து கீழே தள்ளி மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்ததாக கூறப்பட்டது.
தொடர்ந்து காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகனான ஜெயராஜை அந்த கும்பல் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. காளிமுத்துவின் தலையை மட்டும் கல்லிடைக்குறிச்சி - நெல்லை நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் வைத்து விட்டு அந்த கும்பல் சென்றிருப்பது நெல்லை மாவட்டத்தை பதற்றத்தில் ஆழ்த்தியது. பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். கொலைக்கு காரணமான அந்த மர்ம கும்ப கும்பல் யார் என்பது தொடர்பாகவும் எதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டது என்பது குறித்தும் பின்புறத்தில் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பாகவும் முழு விவரத்தை பெற போலீசார் விசாரித்து வருகின்றனர். தந்தை, மகன் இரட்டை கொலை வழக்கில் மூன்று பேரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். மூலச்சி பகுதியைச் சேர்ந்த மகேஷ், குமார், முத்துச்செல்வன் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: நெல்லை இரட்டை கொலையில் திடுக் திருப்பம்... காட்டிக்கொடுத்த டவர் நெட்வொர்க்.. தொக்காய் சிக்கிய 5 பேர் யார்?
காளிமுத்து மற்றும் அவரது ஐந்து வயது மகன் ஜெயராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் மீது வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்துள்ள நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். பழிக்குப்பழியாக இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தை காளிமுத்துவம் அவரது 5 வயது மகனும் தலை துண்டித்துக் கொடூர கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 9 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நெல்லையை உலுக்கிய கொடூரம்... தந்தை - மகன் கொலை..! 11 பேர் மீது பாய்ந்த வழக்கு..!!