திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!
பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மேற்காசியா நிலவரம் மற்றும் இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த உரையாடலின்போது இந்தியா-இஸ்ரேல் உறவின் தற்போதைய நிலை, இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் மேற்காசியாவில் நிலவி வரும் பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழல் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பு இருந்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம், புத்தாக்கம், நீர் மேலாண்மை, இணைய பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் உயர்மட்ட சந்திப்புகளும் தொலைபேசி உரையாடல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலில், இரு தலைவர்களும் இந்தியா-இஸ்ரேல் சிறப்பு நட்புறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 7 ஏன் முக்கியம்? நட்பு தினத்துடன் இன்று இதையும் கொண்டாடுங்கள்! பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள்!
மேலும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை அளிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்துவதற்கான உறுதியை இரு தலைவர்களும் மீண்டும் வெளிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே குறிப்பிடத்தக்க அளவில் ஒத்துழைப்பு இருந்து வரும் நிலையில், இந்த உரையாடல் அதன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மேற்காசியாவில் நிலவி வரும் சமீபத்திய பாதுகாப்பு மற்றும் அரசியல் சூழல் குறித்தும் மோடியும் நெதன்யாகுவும் கருத்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். மேற்காசியாவில் தொடர்ந்து மாறிவரும் நிலவரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மேற்காசிய நாடுகளுடனான உறவு முக்கிய இடம் வகிக்கிறது. எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த பிராந்தியத்தின் நிலைத்தன்மை இந்தியாவுக்கும் முக்கியமானதாக உள்ளது.
இந்த நிலையில், இந்தியா-இஸ்ரேல் உறவின் முன்னேற்றம் மற்றும் மேற்காசியாவின் தற்போதைய சூழல் ஆகிய இரு முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியதாக மோடி-நெதன்யாகு தொலைபேசி உரையாடல் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்! மன்னிப்பு கோரினார் மார்க் ஸூக்கர்பெர்க்! மெட்டாவுக்கு எச்சரிக்கை!